உலு லங்காட், பிப் 16: பயனர் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இருண்ட வழிகளில் ஒளிரும் சாலையை உருவாக்க ஒன்பது மாவட்டங்களில் 15 சாலை பகுதிகளை மாநில அரசு கண்டறிந்துள்ளது.
இந்த திட்டம் RM900,000 செலவில் கட்டம் கட்டமாக்ச் செயல்படுத்தப்படும் என்று உள்கட்டமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் அசிம் கூறினார்.
"இதுவரை ஜேகேஆர் ஒன்பது மாவட்டங்களில் மொத்தம் 15 கிலோமீட்டர் நீளத்தை உள்ளடக்கிய 15 இடங்களை அடையாளம் கண்டுள்ளது," என்று அவர் கூறினார்.
இங்குள்ள பி17-சுங்கை தெக்காலி மற்றும் பி19-சுங்கை லாலாங் சாலைகளில் ஒளிரும் சாலை சாயம் பூசும் இடத்தில் சந்தித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
அதே நேரத்தில், ஒளிரும் பாதையை உருவாக்குவது, தற்போது மாநிலம் முழுவதும் 600 எல்இடி விளக்குக் கம்பங்களைப் பொருத்தும் சிலாங்கூர் திட்டத்துடன் ஒத்துப்போகிறது என்றும் அவர் விளக்கினார்.
"இந்த ஆண்டு, மாநில அரசு கூடுதலாக எல்இடி விளக்குகளைப் பொருத்த RM150 மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளது மற்றும் அது உண்மையில் சாலை பயன்படுத்துபவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
"எல்இடி விளக்குகளை நிறுவுவதைப் போலவே, இந்த ஒளிரும் பாதைகள் தேவைப்படும் வேறு ஏதேனும் பகுதிகள் இருந்தால், உள்ளூர் பிபிடியிடம் தகவல்களையும் நாங்கள் கேட்போம்," என்று அவர் மேலும் கூறினார்.




