ஷா ஆலம், பிப் 16: சிலாங்கூர் வேளாண்மை மேம்பாட்டுக் கழகம் வழங்கும் எஹ்சான்
பிராண்ட் தயாரிப்புகளின் விநியோகஸ்தர்களாக இருக்க சிலாங்கூரைச் சுற்றியுள்ள
தொழில்முனைவோர் மற்றும் வர்த்தகர்கள் அழைக்கப்படுகிறார்கள்.
இந்த மே மாதம் வரை சிலாங்கூரில் பதிவுசெய்யப்பட்ட தனியார் வர்த்தகர்கள் மற்றும்
கூட்டுறவு நிறுவனங்களுக்கு விண்ணப்பங்கள் திறந்திருக்கும் என பிகேபிஎஸ்
சந்தைப்படுத்தல் மூத்த மேலாளர் (OEM மற்றும் ஏற்றுமதி பொருட்கள்) தெரிவித்தார்.
விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் பொருட்களில் அரிசி, கோதுமை மாவு மற்றும்
சமையல் எண்ணெய் போன்ற அடிப்படை பொருட்கள் உட்பட 30 முதல் 50
பொருட்களை சேமிக்கும் அலகுகளும் (SKUs) உள்ளடங்கும் என்று முகமட் வாசிர்
அப்துல் லாதிவ் கூறினார்.
விநியோகஸ்தர்கள் பிகேபிஎஸ்யிலிருந்து சிறப்பு விலை சலுகையைப் பெறுவார்கள்
மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் தள்ளுபடி 10 முதல் 15 சதவிகிதம் ஆகும்
என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.
விநியோகஸ்தர்களை நியமிப்பதன் நோக்கம், பல்வேறு மட்டங்களில் உள்ள
தொழில்முனைவோருக்கு விற்பனைப் பொருட்களை அதிகரிக்க வாய்ப்புகளை
வழங்குவதற்கு ஆகும்.
சிலாங்கூரில் எஹ்சான் பிராண்ட் தயாரிப்புகளுக்கான சந்தையை விரிவுபடுத்துவதுடன்
இது அவர்களின் வருமானத்தை அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.
கோதுமை மாவு, மீகோன், தக்காளி சாஸ், திராம் சாஸ், காயா பண்டான், சார்டின் மற்றும்
காய்ந்த மிளகாய் போன்ற பொருட்கள் நுகர்வோரின் விருப்பமாக உள்ளன.




