SELANGOR

எதிர்வரும் அக்டோபரில் சிலாங்கூர் சர்வதேச ஹலால் மாநாடு நடைபெறும்

9 பிப்ரவரி 2024, 7:37 AM
எதிர்வரும் அக்டோபரில் சிலாங்கூர் சர்வதேச ஹலால் மாநாடு நடைபெறும்

ஷா ஆலம், பிப் 9: எதிர்வரும் அக்டோபரில் திட்டமிடப்பட்டுள்ள சிலாங்கூர் சர்வதேச ஹலால் மாநாடு (செல்ஹாக்) 2024, இத்தொடரை வலுப்படுத்தும், ஹலால் தொழில் துறையின் வளர்ச்சியை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெறும், சிலாங்கூர் சர்வதேச மாநாட்டில் ``Toyyiba Sdn Bhd`` இன் கீழ் 200 உள்ளூர் மற்றும் சர்வதேசக் கண்காட்சியாளர்கள் கலந்து கொள்வார்கள்.

இம்மாநாட்டில் ஹலால் சான்றிதழ், ஹலால் தளவாடங்கள் மற்றும் ஹலால் டிஜிட்டல் மயம் ஆகிய மூன்று முக்கிய கருப்பொருட்களை நோக்கமாக கொண்டு இடம்பெறும் என்று செயல் தலைமை நிர்வாக அதிகாரி முகமட் சியாரில் ஷோகத் அலி கூறினார்.

"தொழில் துறையில் உள்ள தேவைகள் மற்றும் இடைவெளிகளின் அடிப்படையில் இம்மூன்று கருப்பொருள்கள் கொண்டு வரப்பட்டுள்ளன,

"ஹலால் தொழில் தொடர், உணவைத் தவிர தளவாடங்கள் மற்றும் சேவைகள் உட்பட பல துறைகள் மற்றும் பிரிவுகளுடன் நெருக்கமான தொடர்புடையவை" என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

"மலேசியாவின் இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையால் (ஜாகிம்) அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் அமைப்பு எதுவும் இல்லை, எனவே அவர்களை இணைக்க நாங்கள் உதவுகிறோம்" என்று முகமட் சியாரில் கூறினார்.

மார்ச் 2022 இல் ஏற்பாடு செய்யப்பட்ட முதல் மாநாட்டில் RM37.7 மில்லியன் மதிப்புள்ள பரிவர்த்தனைகளைப் பதிவுசெய்தது. இது RM20 மில்லியனைத் தாண்டியது, மேலும் கடந்த ஆண்டு RM57.4 மில்லியனாக அதிகரித்தது.

சந்தைப்படுத்தல் வலையமைப்பை விரிவுபடுத்துவதற்கு ஆசியான் மற்றும் மலேசியாவில் ஹலால் தொழிற்துறையில் முதன்மையான தளத்தை இம்மாநாடு வழங்குகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.