SELANGOR

பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த மாநில அரசு திட்டம்

8 பிப்ரவரி 2024, 9:46 AM
பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த மாநில அரசு திட்டம்

ஷா ஆலம், பிப் 8: இந்த ஆண்டு ஸ்மார்ட் சிலாங்கூர் பஸ் வழித்தடத்தின் மீது  விரிவான மறு ஆய்வு உட்பட பொதுப் போக்குவரத்து அமைப்பை மேம்படுத்துவது மாநில நிர்வாகத்தின் முக்கிய திட்டங்களின் ஒன்றாகும் என்று போக்குவரத்து ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

நகரத்திற்குள் தேவைக்கேற்ப போக்குவரத்து (DRT) வேன் சேவைகள், பாதசாரி நடைபாதைகள் மற்றும் மின்சார பேருந்துகள் ஏற்பாடு செய்தல் ஆகியவைகளில் கவனம் செலுத்தப்படும் பிற விஷயங்கள் ஆகும் என இங் ஸீ  ஹான் தெரிவித்தார்.

"தனியார் வாகனங்களின் பயன்பாட்டை பொது போக்குவரத்திற்கு மாற்றுவதை விரைவுபடுத்தும் நோக்கத்துடன் பொது போக்குவரத்து அமைப்பு அல்லது சிலாங்கூர் போக்குவரத்து மேம்படுத்தப்படும்.

"அனைத்து ஏஜென்சிகளின் ஈடுபாட்டுடன் தரவுப் பகிர்வு மற்றும் பகுப்பாய்விற்கான ஆய்வகத்தை நிறுவுதல். சிலாங்கூர் போக்குவரத்து திட்டம் மற்றும் நடவடிக்கைகள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம்" என்று அவர் நேற்று முகநூலில் தெரிவித்தார்.

பெட்டாலிங் ஜெயா, சுபாங் ஜெயா, ஷா ஆலம் மற்றும் கிள்ளான் ஆகிய நான்கு நகரங்களை உள்ளடக்கிய கிள்ளான் பள்ளத்தாக்கின் நிர்வாகத்தை நிறுவுவதற்கு 2024 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் RM2 மில்லியன் ஒதுக்கப்பட்டது.

முக்கிய தொழில்களை கொண்டிருப்பதுடன், அனைத்து நகரங்களும் பொது போக்குவரத்து, நில உரிமை மற்றும் நலன் சார்ந்த விஷயங்கள் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றன என்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.