ஷா ஆலம், பிப் 2: இம்மாதம் தொடங்கும் சிலாங்கூர் மருத்துவப் பரிசோதனை திட்டத்தில் மேமோகிராம் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனையை மாநில மக்கள் தொகை மற்றும் குடும்ப மேம்பாட்டு வாரியம் (LPPKN) வழங்குகிறது.
இது மாநில அரசும் மாநில மக்கள் தொகை மற்றும் குடும்ப மேம்பாட்டு வாரியம் இணைந்து நடத்தும் முதல் திட்டமாகும். இதில் இரண்டு சேவைகளுக்கும் மொத்தம் 6,500 இலவச ஒதுக்கீடு வழங்கப்பட்டது என அதன் துணைத் தலைவர் ஜுவைரியா சுல்கிஃப்லி கூறினார்.
"மக்களின் நலனுக்காக இந்த ஒத்துழைப்பு தொடரும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் இன்று சிலாங்கூர் மாநில மக்கள் தொகை மற்றும் குடும்ப மேம்பாட்டு வாரியத்தைப் பார்வையிட்ட பிறகு இவ்வாறு கூறினார்.
கடந்த மாதம் துணைத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு ஜுவைரியா மாநில அளவிலான மக்கள் தொகை மற்றும் குடும்ப மேம்பாட்டு வாரிய அலுவலகத்திற்கு வருகை புரிவது இதுவே முதல் முறை ஆகும்.
மாநில மக்கள் தொகை மற்றும் குடும்ப மேம்பாட்டு வாரியம் ஆனது இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் நலனுக்காகவும் முன்னிலைப் படுத்தப்பட வேண்டிய பல்வேறு விரிவான கொள்கைகள் மற்றும் திட்டங்களையும் கொண்டுள்ளது.
"நாங்கள் எங்கள் கொள்கைகளையும் திட்டங்களையும் பிரபலப்படுத்த வேண்டும். இதன் மூலம் பெண்கள், குறிப்பாக மலேசியாவில் உள்ள குடும்பங்கள் தெரிந்து கொள்ளவும், அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவும் முடியும். தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில மக்கள் தொகை மற்றும் குடும்ப மேம்பாட்டு வாரியத்திற்கும் பயணம் மேற்கொள்ளப்படும்" என்று அவர் கூறினார்.




