SELANGOR

10 ஆண்டுகளுக்கு மேல் நீடித்து வரும் வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வு காண எண்ணம் - எஸ் பிரகாஷ்

31 ஜனவரி 2024, 9:52 AM
10 ஆண்டுகளுக்கு மேல் நீடித்து வரும் வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வு காண எண்ணம் - எஸ் பிரகாஷ்

ஷா ஆலம், ஜன 31: தாமான் ஸ்ரீ மூடா குடியிருப்பாளர்களை  10 ஆண்டுகளுக்கு மேல் பாதிக்கும் நீடித்த  வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வு காண கோத்தா கெமுனிங் மாநில சட்டமன்ற உறுப்பினர்  அதிக கவனம் செலுத்துகிறார்.

ஜூலை 2021 முதல் தெனகா நேஷனல் பெர்ஹாட் (TNB) மூலம் துணை மின் நிலைய கட்டிடம் கட்டுவது உட்பட, RM6.8 மில்லியன் மதிப்பில் வடிகால் அமைப்பை மேம்படுத்தும் திட்டத்தையும் செயல்படுத்துவதாக எஸ் பிரகாஷ் கூறினார்.

"மேலும், நாங்கள் தற்போது RM100 மில்லியனுக்கும் அதிகமான செலவில் வெள்ளத்தைத் தணிக்கும்  ஒரு மெகா திட்டத்திற்கான தொழில்நுட்ப ஆய்வை மேற்கொண்டு வருகிறோம்.

இது நடைமுறைப்படுத்தப்பட்டால், வெள்ளப் பிரச்சனைக்கு முழுமையான தீர்வும் தாமான் ஸ்ரீ மூடாவில் வசிக்கும் சுமார் 30,000 மக்களுக்கு நிவாரணமும் கிடைக்கும்,” என்று அவர் தெரிவித்தார்.

ஜனவரி 24 ஆம் தேதி முடிக்கப்பட வேண்டிய பம்ப் ஹவுஸ் மின்சார விநியோகத்திற்கான துணை மின்நிலைய கட்டுமானத் திட்டம் தரை அமைப்பு வலுவாக இல்லாததால் தாமதத்தை எதிர்கொண்டது என்றார்.

"தரையில் நகர்வு இருப்பதால் கட்டுமானப் பணிகளைச் செய்ய முடியாது. எனவே, ஆற்றின் கரையில் அமைந்துள்ளதால் தளத்தை பலப்படுத்த வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.

கடந்த ஆண்டு நவம்பரில், தாமான் ஶ்ரீ மூடாவில் வெள்ளத் தடுப்பைக் கட்டுவதற்கு RM160 மில்லியன் ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்ததாக உள்கட்டமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் அசிம் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.