SELANGOR

பொதுமக்கள் மதிப்பீட்டு வரியைச் செலுத்த நடமாடும் கவுண்டர் - எம்பிபிஜே

18 ஜனவரி 2024, 5:32 AM
பொதுமக்கள் மதிப்பீட்டு வரியைச் செலுத்த நடமாடும் கவுண்டர் - எம்பிபிஜே

ஷா ஆலம், ஜன 18: எதிர்வரும் பிப்ரவரியில் நடமாடும் கவுண்டரைப் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (எம்பிபிஜே) திறக்க உள்ளது. இச்சேவை பொதுமக்கள் மதிப்பீட்டு வரியைச் செலுத்துவதை எளிதாக்குகிறது.

இச்சேவை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வழங்கப்படும். மொத்தம் மூன்று கவுண்டர்கள் SS24 தாமான் மெகா (பிப்ரவரி 17,18), PJS 8 டேசா மந்திரி (பிப்ரவரி 24,25) மற்றும் SD12/1 ஶ்ரீ டாமன்சாரா (பிப்ரவரி 28,29) ஆகிய இடங்களில் திறக்கப்படும்.

கூடுதலாக, எம்பிபிஜே அலுவலக கவுண்டரும் பிப்ரவரி 17, 18, 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்திருக்கும்.

"1/2024 தவணைக்கான மதிப்பீட்டு வரி செலுத்துவதற்கான அலுவலகக் கவுண்டர் திறக்கப்படும்" என்று முகநூலில் அறிவிக்கப்பட்டது.

மேலும் தகவலுக்கு 03-79563544 (நீட்டிப்பு 102,103,108,109) தொடர்பு கொள்ளவும் அல்லது www.mbpj.gov.my இல் ePAY@MBPJ அல்லது ``JomPAY `` வழியாக இணைய வங்கி மூலம் பணம் செலுத்தவும்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.