ஷா ஆலம், ஜன 11: இந்த பிப்ரவரி முதல் மாநிலம் முழுவதும் காகாசான் ரும்பூன் திட்டம் சிலாங்கூர் முழுவதற்கும் விரிவுப்படுத்தப்படும் என்று ஒற்றுமை ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.
ஒவ்வொரு இடத்திலும் மூன்று பகல், இரண்டு இரவு நிகழ்ச்சி உலு சிலாங்கூரில் தொடங்கி, அடுத்த நவம்பரில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக டத்தோ ரிசாம் இஸ்மாயில் கூறினார்.
"இந்த பிப்ரவரியில் உலு சிலாங்கூரில் தொடங்குவோம். நாட்டுப்புற விளையாட்டுகள், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் கைவினைப் பொருள் மையங்களுக்குச் செல்வது ஆகியவை இதில் அடங்கும்.
"நாங்கள் அதிர்ஷ்டசாலிகள், ஏனென்றால் டத்தோ மந்திரி புசார் மற்றும் சிலாங்கூர் ராஜா மூடா அவர்களும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் வருகை புரிவர்," என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.
கடந்த நவம்பரில் பன்முகத்தன்மையை கொண்டாடவும், ஒற்றுமை உணர்வைத் தூண்டும் காகாசான் ரும்பூன் சிலாங்கூர் திட்டம் ஒன்பது மாவட்டங்களில் 4.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டில் நடத்தப்படும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இதற்கிடையில், மறுசீரமைப்பு முறையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு கிராமத்திற்கும் தலைமைத்துவத்தை வலுப்படுத்துவதை ரிஸாம் நோக்கமாகக் கொண்டுள்ளார்.
2025 ஆம் ஆண்டிற்கான `` Tahun Melawat Selangor`` திட்டத்தில் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதோடு, உள்ளூர் பொருளாதாரத்தின் நன்மைகளை முன்னிலைப்படுத்த ஒவ்வொரு கிராமத்திற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
"கிராமத் தலைவரின் பங்கை பலப்படுத்தவும், ஒவ்வொரு கிராமத்திலும் தலைமையைச் மறுசீரமைக்கவும் திட்டமிட்டுள்ளேன். இதற்குப் பிறகு ஒற்றுமை விழாவையும் அதிகரிப்போம்," என்று அவர் கூறினார்.
சிலாங்கூர் பட்ஜெட் 2024 இன் சமர்ப்பணத்தில், கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களையும் பாரம்பரிய கிராமப் பொருளாதாரத்தையும் செயல்படுத்த மாநில அரசு RM4 மில்லியனை ஒதுக்கியது.




