ஷா ஆலம், ஜன 5: ஷா ஆலம் மாநகராட்சி (எம்பிஎஸ்ஏ) 82 பள்ளிகளுடன் இணைந்து 2013 முதல் பல்வேறு வகையான 3,274 பழ மரங்களை வெற்றிகரமாக நட்டுள்ளது.
சிறு வயதிலிருந்தே நல்ல நற்பண்புகளை வளர்ப்பதற்கும் சுற்றுச்சூழலை மதிக்கவும் எம்பிஎஸ்ஏ மேற்கொண்ட திட்டகளில் dusun @ mysekolah திட்டமும் ஒன்றாகும் என அதன் கார்ப்பரேட் மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் இயக்குனர் அசார் முகமட் ஷெரீப் கூறினார்.
"இந்த திட்டத்தின் மூலம், பழ மரங்கள், சரியான நடவு மற்றும் மர பராமரிப்பு முறைகள் பற்றிய அடிப்படை அறிவு மாணவர்களுக்கு கற்பிக்கப்படும்.
"ஆண்டுக்கு 80,000 மரங்கள் நடும் இலக்கை அடைய உதவுவதோடு, பூங்காவிற்குள் ஷா ஆலம் நகரை அமைக்கும் இலக்குடன் இந்தத் திட்டம் உள்ளது" என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.
இத்திடம் தொடங்கப்பட்டதிலிருந்து பள்ளிகளில் ரம்புத்தான், செம்பேடாக், கொய்யா, மாம்பழம், பூலாசன் மற்றும் செர்மை உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.




