சுபாங் ஜெயா, டிச 14: கைது வாரண்ட்களை நிறைவேற்றுவதற்கான நடைமுறைகள் மற்றும் வாரண்ட் இல்லாத கைது அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கான கையேட்டை சுபாங் ஜெயா மாநகராட்சி (எம்பிஎஸ்ஜே) அறிமுகப் படுத்தியுள்ளது.
எம்பிஎஸ்ஜே பயனுள்ள மற்றும் விரிவான அமலாக்க முறைகளைக் கொண்டுள்ளது என்பதை கையேட்டின் வெளியீடு நிரூபிக்கிறது என்று அதன் மேயர் டத்தோ முகமட் ஃபௌசி முகமட் யாதிம் கூறினார்.
"இந்த கையேடு அனைத்து எம்பிஎஸ்ஜே அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் கைது நடவடிக்கைகளை மிகவும் திறம்பட, வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையுடன் மேற்கொள்வதற்கான வழிகாட்டியாகவும் அமைகிறது.
"இது நாகரீக சமுதாயத்தை உருவாக்குவதற்கான எம்பிஎஸ்ஜே மூலோபாய திட்டம் 2020-2025 உடன் ஒத்துப்போகிறது," என்று நேற்று எம்பிஎஸ்ஜே தலைமையகத்தில் கையேடு வெளியீட்டு விழாவில் அவர் கூறினார்.
மேலும், வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களில் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் குற்றம் புரிந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் குற்றவாளிகளின் அச்சுறுத்தலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளும் எம்பிஎஸ்ஜே அதிகாரிகளின் உரிமை ஆகியவை அடங்கும் என்று முகமட் ஃபௌசி விளக்கினார்.
"எம்பிஎஸ்ஜேயின் வாரண்ட் அதிகாரிகளும் விசாரணை அதிகாரிகளும் சவால்களை எதிர்கொள்ளுவதற்கு அவர்களின் அடிப்படை உரிமையைப் புரிந்துகொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.




