SELANGOR

தீ விபத்தில் நாசமான வீட்டை சரி செய்ய எம்பிஐ நன்கொடை வழங்கியது

8 டிசம்பர் 2023, 10:43 AM
தீ விபத்தில் நாசமான வீட்டை சரி செய்ய எம்பிஐ நன்கொடை வழங்கியது

அம்பாங் ஜெயா, டிச 8: கடந்த ஏப்ரல் மாதம் தீ விபத்தில் நாசமான தனது வீட்டை சரி செய்ய நன்கொடை அளித்த சிலாங்கூர் மந்திரி புசார் (கட்டமைப்பு) அல்லது எம்பிஐயின் அக்கறைக்கு முதியவர் ஒருவர் நெகிழ்ந்து நன்றி தெரிவித்தார்.

RM3,000 பண உதவியானது வீட்டைப் பழுது பார்ப்பதற்காக  செலவைச் சுமக்க வேண்டியது  மற்றும் அவரது குடும்பத்தினரின் சுமையைக் குறைக்கும் என்று 74 வயதான ரோஸ்லின் சுலோங் கூறினார்.

"இந்த வீட்டைப் பழுது பார்க்கும் பணியில் உதவிய எனது பகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சையட் அப்துல் ரஹ்மான் அல்ஹதாட் அல்லது அல்டிமெட் உட்பட, பண நன்கொடை வழங்கிய எம்பிஐக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்கொடை வழங்கும் நிகழ்ச்சியில் "இரு தரப்பினரின் பங்களிப்பும் எனக்கு கொஞ்சம் நிம்மதியை அளித்தது என அவர் தெரிவித்தார்.

ஏப்ரல் 25, மாலை 5.30 மணியளவில் நடந்த இச்சம்பவத்தை விவரித்த ரோஸ்லின், தீ விபத்தில் சிக்கிய எனது வீட்டிற்கு அடுத்துள்ள கார் பட்டறையில் இருந்து தீ பரவியது," என்று மனைவியுடன் வசிக்கும் அவர் கூறினார்.

இதற்கிடையில், லெம்பா ஜெயா தொகுதி சேவை மையத்தின் கீழ் மொத்தம் 12 தன்னார்வலர்கள் இந்த வார இறுதியில் வீட்டை சரிசெய்ய உதவுவார்கள் என்று அல்டிமெட் கூறினார்.

" எம்பிஐயின் நன்கொடை உதவியுடன், சாயம் பூசுதல், வீட்டின் கூரையை மாற்றுதல் மற்றும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான எங்கள் முயற்சிகள் மேலும் துரிதப்படுத்தப்படும்,`` என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.