ஷா ஆலம், நவ 30 - கோம்பாக் நாடாளுமன்ற மற்றும் சுங்கை துவா சட்டமன்றத் தொகுதி நிலையிலான தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு எதிர்வரும் டிசம்பர் 2ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.தாமான் ஸ்ரீ செலாயாங் டத்தாரான் சுங்கை துவாவில் (பழைய வார்த்தா) இரவு மணி 7.01 தொடங்கி இந்த பொது உபசரிப்பு சிறப்பான முறையில் நடைபெறும் என்று கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினரும் சுங்கை துவா சட்டமன்ற உறுப்பினருமான
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த பொது உபசரிப்பில் பாரம்பரிய நடனம், அதிர்ஷ்டக் குலுக்கு, வாண வேடிக்கை
உள்ளிட்ட நிகழ்வுகளோடு ஹலால் உணவு விருந்து உபசரிப்பும் இடம் பெறும் என்று
அவர் சொன்னார்.
மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விருந்து நிகழ்வில்
திரளாக வந்து கலந்து கொள்ளுமாறு சிலாங்கூர் மந்திரி புசாருமான அவர் தொகுதி
மக்கள் கேட்டுக் கொண்டார்.
SELANGOR
கோம்பாக் நாடாளுமன்ற & சுங்கை துவா சட்டமன்ற தொகுதியின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு
30 நவம்பர் 2023, 8:48 AM




