SELANGOR

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு பிரச்சாரத்தை   மாநில அரசு தொடங்கியுள்ளது

22 நவம்பர் 2023, 1:04 PM
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு பிரச்சாரத்தை   மாநில அரசு தொடங்கியுள்ளது

ஷா ஆலம், நவ. 22: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை எதிர்த்துப் போராடுவது மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் பிரச்சாரத்தை மாநில அரசு தொடங்கியுள்ளது.

"இந்தப் பிரச்சாரம், குறிப்பாகப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் மன மற்றும் உடல் ரீதியான வன்முறைகள் குறித்து அதிக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு சமூக நடவடிக்கையாகும் என பெண்கள் அதிகாரமளித்தல் மற்றும் சமூக நலத்துறையின் ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

."அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் இந்த தடுப்பு விவரிப்பு ஒவ்வொரு மட்டத்திலும் கட்டமைக்கப்பட வேண்டும்.

"இந்த பிரச்சாரத்தைச் செயல்படுத்துவதன் மூலம், சிலாங்கூரில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நிகழும் வன்முறைக்கு எதிராக ஒன்றுபட முடியும் என்று நம்பப்படுகிறது" என அன்பால் சாரி கூறினார்.

முன்னதாக, டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் எதிர்க்கட்சிகள் உட்பட சட்டமன்ற உறுப்பினர்களும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நிகழும் வன்முறைக்கு எதிரான போராட்ட பிரசாரத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் "ஜிங்காகான் சிலாங்கூர்" மற்றும் "பாங்கிட்!" என்ற பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வதேச தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25 அன்று நம் நாட்டிலும் உலக அளவிலும் கொண்டாடப்படுகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.