ஷா ஆலம், நவ 22: நவம்பர் 14 முதல் விவாதிக்கப்பட்ட வழங்கல் சட்ட மசோதா 2024 க்குச் சிலாங்கூர் மாநில சட்டமன்றம் (டிஎன்எஸ்) இன்று ஒப்புதல் அளித்தது.
டிஎன்எஸ் சபாநாயகர் லாவ் வெங் சான் தலைமையிலான அமர்வில் வாக்கெடுப்பு மூலம் மசோதா அங்கீகரிக்கப்பட்டது.
வெங் சானின் கூற்றுப்படி, எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலி உட்பட மொத்தம் 43 மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் (ADN) மசோதாவை விவாதத்தில் பங்கேற்றனர்.
அரச நிதி ஒதுக்கீடு (திருத்தம்) சட்ட மசோதா 2023 மற்றும் துணை வழங்கல் சட்ட மசோதா 2023 ஆகியவையும் அங்கீகரிக்கப்பட்டது.
கடந்த நவம்பர் 10ஆம் தேதி அறிவிக்கப்பட்ட சிலாங்கூர் 2024 பட்ஜெட்டில் மாநில வளர்ச்சி செலவுகளை நிர்வகிப்பதற்கும் செயல்படுத்துவதற்கும் RM2.53 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
RM1.33 பில்லியன் அல்லது 52.6 சதவிகிதம் இயக்கச் செலவுகளுக்காகவும், RM1.2 பில்லியன் வளர்ச்சிக்காகவும் ஒதுக்கப்பட்டதாக டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.




