SELANGOR

டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்வதற்காக ஏடிஸ் கொசு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

22 நவம்பர் 2023, 6:28 AM
டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்வதற்காக ஏடிஸ் கொசு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

ஷா ஆலம், நவ.22: மாநிலத்தில் டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்வதற்காக ஏடிஸ் கொசு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், குறிப்பாகக் குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இச்சம்பவங்களுக்குப் பங்களிக்கும் முக்கிய காரணிகளில் தூய்மையின் நிலை மற்றும் பின்புற சந்துகள், சட்டவிரோதத் தோட்டங்கள், வீடுகள் மற்றும் வெற்று நிலங்களின் சுற்றுச்சூழல் நிலை ஆகியவை அடங்கும் என்று பொது சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

நவம்பர் 11 அன்று முடிவடைந்த தொற்றுநோயின் 45 வது வாரத்தில் மொத்தம் 50,730 சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இது கடந்த ஆண்டு 31,078 சம்பவங்களுடன் ஒப்பிடும்போது 63.2 சதவீதம் அதிகரித்துள்ளது என ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.

"அதைத் தொடர்ந்து, சிலாங்கூர் மாநில ஒருங்கிணைந்த டிங்கி சோதனையில் கடந்த பிப்ரவரி 20 முதல் மார்ச் 23 வரை பெட்டாலிங், கிள்ளான், உலு சிலாங்கூர் மற்றும் உலு லங்காட்டில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்ற அமர்வில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், டிங்கி காய்ச்சலால் ஆபத்துக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சிகிச்சை பெறுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

இதற்கிடையில், ஏடிஸ் கொசுக்களை இனப்பெருக்கம் செய்ய காரணியாக இருக்கும் தனிநபர்கள் அல்லது வளாகங்களின் உரிமையாளர்கள் மீது நோய் பரப்பும் பூச்சிகளை அழிக்கும் சட்டம் 1975ன் மூலம் அபராதம் விதிக்க முடியும் என்று ஜமாலியா வலியுறுத்தினார்.

"பிரிவு 8 அறிவிப்புக்கு இணங்க தவறினால் வளாகத்தை மூடுவதற்கான கட்டளை அல்லது அபராதம் விதிக்கப்படும். அபராதத்தைச் செலுத்தாவிட்டால், நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும்," என்று அவர் மேலும் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.