SELANGOR

பல்வேறு நிறுவன சமூகப் பொறுப்பு (CSR) திட்டங்களுக்காக எம்பிஐ மொத்தம் RM25 மில்லியன் செலவழித்துள்ளது

8 நவம்பர் 2023, 3:54 AM
பல்வேறு நிறுவன சமூகப் பொறுப்பு (CSR) திட்டங்களுக்காக எம்பிஐ மொத்தம் RM25 மில்லியன் செலவழித்துள்ளது

சிப்பாங், நவ 8 - இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை பல்வேறு நிறுவன சமூகப் பொறுப்பு (CSR) திட்டங்களுக்காகச் சிலாங்கூர் மந்திரி புசார் (கட்டமைப்பு) அல்லது எம்பிஐ மொத்தம் RM25 மில்லியன் செலவழித்துள்ளது.

அந்த நிதியானது சிலாங்கூர் மக்கள் கல்வித் திட்டம் (PTRS), ஹாஜி முசாசா பங்களிப்புகள் மற்றும் மசூதித் தொழிலாளர்கள் மற்றும் கிராமத் தலைவர்களுக்கு சிறப்பு நிதி உதவி (BKK) வழங்கப் பயன்படுத்தப்பட்டது என எம்பிஐ நிறுவன சமூகப் பொறுப்பு மற்றும் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் அஹ்மட் அஸ்ரி ஜைனல் நோர் கூறினார்.

அதில் சமூகம், விளையாட்டு, அதிகாரமளித்தல் மற்றும் பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களின் சுமையை எளிதாக்குவதற்கான உதவிகள் போன்ற செயல்பாடுகளை உள்ளடக்கிய பிற திட்டங்களும் அடங்கும் என்று அவர் தெரிவித்தார்.

“சிஎஸ்ஆர் திட்டத்தை வெற்றிகரமாகச் செய்ய எம்பிஐ ஆண்டுக்கு 30 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டைப் பெறுகிறது.

தற்போது, ஆண்டு இறுதி என்பதால், ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை.

“இப்போதுதான் பேரிடர்களை எதிர்கொள்வதில் கவனம் செலுத்துகிறோம். அந்த நோக்கத்திற்காக நாங்கள் கிட்டத்தட்ட RM500,000 தயார் செய்துள்ளோம், ”என்று அவர் டெங்கிலில் உள்ள தற்காலிகத் தங்கும் மையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கிய பின்னர் கூறினார்.

இதற்கிடையில், சிலாங்கூர் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்திடமிருந்து (நட்மா) கூடுதல் நிதி பெறப்பட்டது. இது மாநிலப் பேரிடர் மேலாண்மைப் பிரிவிடம் (UPBN) ஒப்படைக்கப்படும் என்றார்.

"உணவு மற்றும் சுகாதார கருவிகளை வாங்குவதற்கு மாநிலப் பேரிடர் மேலாண்மை உடன் இணைந்து எம்பிஐ செயல்படும்," என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.