SELANGOR

80 சதவீதம் வரை அபராதக் குறைப்பைச் செலாயாங் நகராண்மை கழகம் வழங்குகிறது

2 நவம்பர் 2023, 9:48 AM
80 சதவீதம் வரை அபராதக் குறைப்பைச் செலாயாங் நகராண்மை கழகம் வழங்குகிறது

ஷா ஆலம், நவ 2: இந்த ஆண்டு நவம்பர் 1 முதல் டிசம்பர் 31 வரை குற்றத்தின் வகைக்கு ஏற்ப 80 சதவீதம் வரை அபராதக் குறைப்பை செலாயாங் நகராண்மை கழகம் (எம்பிஎஸ்) வழங்குகிறது.

மெனாரா எம்.பி.எஸ்ஸின் நான்காவது மாடியில் உள்ள சட்டத் துறையின் மேல்முறையீட்டு கவுண்டரில் அல்லது மைஎம்பிஎஸ் அமைப்பு மூலம் அபராத நிலுவைத் தொகையைச் சரிபார்க்கலாம் என்று உள்ளாட்சி அமைப்பு (பிபிடி) பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளது.

"இந்த பிரச்சாரம் நிலுவைத் தொகையைச் செலுத்த பொதுமக்களுக்கு வாய்ப்பளிக்கிறது.

"பணமாகவும் அல்லது எம்பிஎஸ் கியோஸ்க், டெபிட் அல்லது கிரெடிட் கார்ட் மூலமாகவும் அபராத்தைச் செலுத்தலாம்" என்று அவர் முகநூலில் தெரிவித்தார்.

சம்மன் என வகைப்படுத்தப்பட்டுள்ள அபராதத்திற்குப் பிரச்சாரத்தில் மேல்முறையீடு செய்ய தகுதியில்லை என்று எம்.பி.எஸ் தெரிவித்தது.

"பிரசாரக் காலத்தில் மேல்முறையீடு செய்த பிறகு பணத்தைச் செலுத்த தவறினால், எந்த அறிவிப்பும் இல்லாமல் மேல்முறையீட்டை ரத்து செய்ய எம்பிஎஸ்க்கு உரிமை உண்டு.

மேலும் தகவலுக்கு www.mps.gov.my ஐப் பார்வையிடவும் அல்லது 0361265881/ 5882/ 5875 என்ற எண்ணில் சட்டத் துறையைத் தொடர்பு கொள்ளவும்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.