ஷா ஆலம், நவ. 2: வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவிகளை ஒருங்கிணைப்பதற்காகக் கிள்ளான், உலு லங்காட் மற்றும் பெட்டாலிங் ஆகிய இடங்களில் மாவட்டப் பேரிடர் செயல்பாட்டு மையங்கள் இந்த மாதம் முதல் திறக்கப்பட்டன.
இந்த மையங்கள் RM240,000-க்கும் அதிகமான செலவில் உருவாக்கப் பட்டன. மேலும், உயர் தொழில்நுட்ப அமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுடன் முழுமையாக இணையம் வழி செயல்படும் என மாநில அரசாங்கச் செயலாளர் கூறினார்.
முதற்கட்டமாக, அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படும் மூன்று மாவட்டங்களில் கட்டுமானப் பணிகளுக்கு மாநில நிர்வாகம் முன்னுரிமை அளித்து வருவதாகவும், அடுத்த ஆண்டு மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் டத்தோ ஹாரிஸ் காசிம் விளக்கினார்.
"இந்த மையம் தற்போதைய நிலைமையை கண்காணித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி உட்பட மேல் நடவடிக்கைகளுக்காக ஸ்மார்ட் சிலாங்கூர் செயல்பாட்டு மையத்திற்கு (SSOC) அனுப்பும் முன் பேரிடர் தகவலைச் சேகரிக்கும்.
"வானிலைத் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை போன்ற சில ஏஜென்சிகளிடமிருந்து சமீபத்திய தகவல்களைப் பெற, இந்த மையம் மாநிலத் தரவு பகிர்வு தளத்தையும் (SELGDX) பயன்படுத்துகிறது.
பெட்டாலிங் பேரிடர் நடவடிக்கை மையத்தை இன்று திறந்து வைத்து பேசிய அவர், "முன்பு, தகவல்களை மெதுவாகப் பெறுவதற்குக் கையேடு முறையைப் பயன்படுத்தினோம். எனவே இந்த மையம் விரிவான பேரிடர் மேலாண்மைக்கு ஒரு அளவுகோலாக இருக்கும்" என்றார்.
``SELGDX`` கடந்த மாதம் தொடங்கப்பட்டது மற்றும் அணுகலை எளிதாக்குவதற்கும், தரவு செயலாக்கத்தை விரைவுபடுத்துவதற்கும் 70 துறைகள் மற்றும் ஏஜென்சிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைக்கப்பட்ட தரவு பகிர்வு போர்ட்டலை உருவாக்கிய முதல் மாநிலமாகச் சிலாங்கூர் விளங்குகிறது.




