ஷா ஆலம், அக் 31: கடந்த ஆகஸ்ட் 12 அன்று மாநிலத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட 52 பள்ளிகளுக்கு மொத்தம் RM156,000 நன்கொடை வழங்கப்பட்டது.
ஷா ஆலம் மாநகராட்சி அறிக்கை ஒன்றின் மூலம் ஒவ்வொரு பள்ளிக்கும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த RM3,000 வழங்கப்பட்ட்டது என்று தெரிவித்துள்ளது.
"இந்த நன்கொடையின் மூலம், வசதியான சூழலைப் உருவாக்கி மாணவர்களிடையே கற்றல் தரத்தை மேம்படுத்த முடியும்".
சிலாங்கூர் மாநில கல்வித் துறையின் முதன்மை உதவிச் செயலாளர் முகமட் அலியாஸ் அவாங்கிடம் ஷா ஆலமின் தற்காலிக மேயர் செமிரி தர்மான் காசோலையை வழங்கினார்.








