ஷா ஆலம், அக். 31: செப்டம்பர் மாத நிலவரப்படி செலாயாங் நகராண்மை கழகம் (எம்பிஎஸ்) மொத்தம் RM90.98 மில்லியன் மதிப்பீட்டு வரியை வசூலித்துள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான இலக்கு ரிம 114.78 மில்லியன் தொகையில் 79.27 சதவீதத்தை எட்டியுள்ளதாக துணைத் தலைவர் ஆடி பைசல் அஹ்மட் தர்மிசி தெரிவித்தார்.
"RM12 மில்லியன் மொத்த நிலுவைத் தொகையில் இருந்து RM8.85 மில்லியன் அல்லது 73.72 சதவிகிதம் வெற்றிகரமாகப் பெறப்பட்டது" என அவர் நேற்று எம்பிஎஸ் கூட்டத்தில் கூறினார்.
கடந்த ஜனவரியில் தொடங்கிய My MPS, Lazada, Shopee மற்றும் Cepat செயலிகள் மூலம் எம்பிஎஸ் வரி செலுத்தும் பிரச்சாரத்தை இணையத்தில் தொடர்ந்ததாக அவர் விளக்கினார்.
மேலும், இந்த நவம்பரில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் வடகிழக்கு பருவமழையின் (எம்டிஎல்) மாற்றத்தை முன்னிட்டு வெள்ளத்தை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு எம்பிஎஸ்ஸிடம் ஆடி பைசல் தெரிவித்தார்.
"இந்த ஆரம்ப தயார் நிலைகள் மூலம், பல தேவையற்ற விஷயங்களைத் தவிர்க்கலாம்," என்று அவர் கூறினார்.








