SELANGOR

பெண்கள் தலைமைத்துவ அகாடமியில் (ஏகே டபிள்யூ) மொத்தம் 68  பேருக்குப் பட்டமளிப்பு விழா 

25 அக்டோபர் 2023, 6:21 AM
பெண்கள் தலைமைத்துவ அகாடமியில் (ஏகே டபிள்யூ) மொத்தம் 68  பேருக்குப் பட்டமளிப்பு விழா 

ஷா ஆலம், அக் 25: பெண்கள் தலைமைத்துவ அகாடமியில் (ஏகே டபிள்யூ) மொத்தம் 68 பேர் 15 மாத கற்றல் அமர்வில் கலந்து கொண்ட பிறகு, சனிக்கிழமை பட்டமளிப்பு விழாவில் கொண்டாடப்பட்டனர்.

இங்குள்ள  சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா கட்டிட  ஜூப்லி பேராக் ஆடிட்டோரியத்தில்  நடைபெற்ற இரண்டாவது பட்டமளிப்பு விழாவை பெண்கள் மற்றும் குடும்ப அதிகார ஆட்சிக்குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி நிறைவு செய்தார்.

பெண்கள் தலைமைத்துவ அகாடமியின் பங்கேற்பாளர்கள் கடந்த ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி கற்றல் தொடங்கியதிலிருந்து நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் பயிற்சி மற்றும் பணிகளை வெற்றிகரமாக முடித்தனர் என அன்ஃபால் தனது உரையில் தெரிவித்தார்.

"பட்டதாரிகள் அகாடமி அமர்வு முழுவதும் சிறந்த அர்ப்பணிப்பை வழங்கினர். இந்த பட்டமளிப்பு சகோதரிகள் உயர்ந்த நிலைக்கு முன்னேறுவதற்கான ஒரு தொடக்க புள்ளியாகும்.

"அறிவைப் பெறுவதற்கான பயணம் இங்கே முடிவடையவில்லை, மாறாக இது ஒரு தொடர்ச்சியான ஆற்றல்மிக்க செயல்முறையாகும், சகோதரிகள் எதையும் கற்றுக் கொள்வதில் திறந்த மனதுடன் இருக்க வேண்டும்.

"ஒரு பெண்ணாகப் பல்வேறு கண்ணோட்டங்களில் ஒரு சூழ்நிலையைப் பார்க்கவும் அதனை மதிப்பீடு செய்யும் இந்த வாய்ப்பைப் பயன் படுத்தவும்" என்று அவர் கூறினார்.

பெண்கள் தலைமைத்துவ அகாடமி என்பது பெண்களின் திறன்களை வலுப்படுத்தவும், அரசியல் மற்றும் சமூகப் பணிகளில் அதிக பெண் தலைவர்களை உருவாக்குவதற்கான 'திறமை சேனலாக' செயல்படவும் சிலாங்கூர் அரசாங்கத்தால் நிதியுதவி செய்யப்படும் ஒரு திட்டமாகும்.

அதில் நான்கு முக்கிய கற்றல் தொகுதிகள் உள்ளன. அவை மென்மையான மற்றும் நிறுவன திறன்கள், பாலின விழிப்புணர்வு, அரசியல் மற்றும் பொருளாதார தலைமை மற்றும் தகவல் தொடர்பு திறன் ஆகும்.

சிலாங்கூர் பொது நூலகக் கழகத்தில் (பிபிஏஎஸ்) ஒவ்வொரு புதன்கிழமையும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.

இன்றுவரை, பெண்கள் தலைமைத்துவ அகாடமி மொத்தம் 248 பட்டதாரிகளை உருவாக்கியுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.