SELANGOR

36,326 தவாஸ் உறுப்பினர்கள் பள்ளி உதவித் திட்டத்தின் (பிபிஎம்எஸ்) வழி பலன் பெறத் தகுதி பெற்றுள்ளனர்

24 அக்டோபர் 2023, 4:03 AM
36,326 தவாஸ் உறுப்பினர்கள் பள்ளி உதவித் திட்டத்தின் (பிபிஎம்எஸ்) வழி பலன் பெறத் தகுதி பெற்றுள்ளனர்

ஷா ஆலம், அக் 24: அடுத்த ஆண்டு முதலாம் வகுப்பில் நுழையும் 36,326 தபோங் வாரிசான் அனாக் சிலாங்கூரின் (தவாஸ்) உறுப்பினர்கள் பள்ளி உதவித் திட்டத்தின் (பிபிஎம்எஸ்) பலன்களைப் பெறத் தகுதி பெற்றுள்ளனர்.

பள்ளிப் பைகள், எழுதுபொருள் உபகரணங்கள், உணவுப் பாத்திரங்கள் மற்றும் உண்டியல் போன்ற பொருட்கள் இந்த டிசம்பரில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக யாயாசான் வாரிசன் அனாக் சிலாங்கூர் (யாவாஸ்) தெரிவித்தது.

"யாயாசான் வாரிசான் அனாக் சிலாங்கூர் (யாவாஸ்) செயலியை இப்போதே பதிவிறக்கம் செய்து, பதிவு செய்யுங்கள்" என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 2017 இல் பிறந்த தவாஸ் உறுப்பினர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களிடம், அடுத்த ஆண்டு முதலாம் ஆண்டிற்குள் நுழையவிருக்கும் அவர்களின் பிள்ளைகளின் தகவல்களை உதவி விநியோகத்திற்காகப் புதுப்பிக்குமாறு யாவாஸ் கேட்டுக் கொண்டது.

2008 இல் தொடங்கப்பட்ட பல்வேறு மாநில நலத் திட்டங்களில் சிலாங்கூரில் பிறக்கும் குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய தவாஸ் திட்டம் தொடங்கப்பட்டது மற்றும் குழந்தைகளுக்கு மூன்று வயது ஆகும் முன் இத்திட்டத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். உறுப்பினர்கள் 18 வயதை அடையும்போது RM1,500 பெறுவார்கள்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.