ஷா ஆலம், அக் 24: அரிசி, முட்டை போன்ற பல்வேறு அடிப்படைப்
பொருட்களை மலிவு விலையில் விற்கும் ஜுவாலான் எஹ்சான்
ரஹ்மா திட்டம் இன்று மேலும் மூன்று இடங்களில் காலை 10
மணிக்குத் தொடரும்.
சபாக் பெர்ணம் மாவட்டம் மற்றும் நில அலுவலகம் (சபாக்),
ஹூஜோங் தஞ்சோங் அலுவலகம் (செமினி) மற்றும் 3கே எஸ்எஸ்13
வளாகம் (சுபாங் ஜெயா) ஆகிய இடங்களில் விற்பனை
நடைபெறும்.
ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயனடைந்த 2,850
இடங்களில் சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகத்தால் (PKPS)
நடத்தப்பட்ட இந்த மலிவு விற்பனையைச் செயல்படுத்த
சிலாங்கூர் RM40 மில்லியன் மானியம் செலவிட்டது.
இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் மாட்டிறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும்
5கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.
பொதுமக்கள் பி.கே.பி.எஸ் முகநூல் அல்லது http://linktr.ee/myPKPS என்ற இணைப்பின் மூலம் மலிவு விற்பனை நடைபெறும் இடங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.








