SELANGOR

 நீர் மாசுபாடுக்கு எதிரான தீர்ப்புகள், குற்றவாளிகளுக்கு நல்ல படிப்பினை – மந்திரி புசார்

18 அக்டோபர் 2023, 7:01 AM
 நீர் மாசுபாடுக்கு எதிரான தீர்ப்புகள், குற்றவாளிகளுக்கு  நல்ல படிப்பினை – மந்திரி புசார்

கோலா சிலாங்கூர், அக் 18: நீரை மாசு படுத்துபவர்களுக்கு எதிரான நீதிமன்றத்தின் தீர்ப்பு குறிப்பிட்ட தரப்பினருக்குப் பாடம் புகட்ட விரைவில் இறுதி செய்யப்படும் என டத்தோ மந்திரி புசார் நம்புகிறார்.

நீதித்துறையின் முடிவால் மாநிலத்தின் நீர் வழங்கல் மற்றும் வளங்களின் தொடர்ச்சியை உறுதி செய்ய முடியும் என்றும், பயனர்களுக்கு இடையூறு இல்லாமல் விநியோகிக்க முடியும் என்றும் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

"நீதிமன்றத்தில் சில வழக்குகள் உள்ளன. அனைவருக்கும் பாடம் கற்பிக்க அவை விரைவில் முடிக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் இது விநியோகத்தின் தொடர்ச்சியை உறுதி செய்யும்," என்று அவர் ஜெராம் கழிவு திடப்பொருள் ஆலைக்கு அடிக்கல் நாட்டும் பணியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த பின்னர் இவ்வாறு கூறினார்.

நவம்பர் 2020இல், நதி மாசுபாட்டின் காரணமாக நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பணிகளை நிறுத்தியதால் அடிக்கடி நீர் விநியோகத் தடைகள் ஏற்பட்டன. அதனால், மாநில அரசு லுவாஸ் சட்டத்தில் ஒரு திருத்தத்தை நிறைவேற்றியது.

இந்த திருத்தம் கட்டாய சிறைத்தண்டனைக்கான விதிகளைச் சேர்த்தது மற்றும் குறைந்தபட்ச அபராதம் RM200,000 மற்றும் அதிகபட்சம் RM1 மில்லியனாக உயர்த்தப்பட்டது.

லுவாஸ் நீர் மாசுபாடு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் தூய்மைப்படுத்தும் பணிக்கான செலவையும் அவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும், நீர் மாசுபடுத்தும் குற்றங்கள் குறித்த தகவல் தெரிவிப்பவர்களுக்கு வெகுமதியும் வழங்க உத்தரவிடலாம்.

சிலாங்கூரில் சுற்றுச்சூழல் குற்றங்களைப் பற்றி புகார் அளிப்பவர்களுக்கு ரிம 20,000 வெகுமதியும் மாநில அரசு வழங்குகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.