ஷா ஆலம், அக் 18: இந்த ஞாயிற்றுக்கிழமை தாமான் தாசிக் ஷா ஆலமில் RM50,000 க்கும் மேல் ரொக்கப் பரிசை வழங்கும் ஷா ஆலம் 2023 மீன்பிடிப் போட்டியில் பங்கேற்கப் பொதுமக்கள் அழைக்கப்படுகிறார்கள்.
இந்த போட்டி காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறுவதாகவும், நகரின் 23 வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஷா ஆலம் மாநகராட்சி கார்ப்பரேட் மற்றும் மக்கள் தொடர்பு பிரிவு தலைவர் ஷாஹ்ரின் அஹ்மட் கூறினார்.
"ஷா ஆலம் ஏரி ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே மீன்பிடி போட்டிகளுக்காகத் திறக்கப்படுவதால், இந்த போட்டியில் பங்கேற்க மீனவர்களை அழைக்கிறோம். இந்த ஆண்டு சுமார் 1,000 பேரை இலக்காகக் கொண்டுள்ளோம்.
"போட்டியில் 15 பங்கேற்பாளர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். வெற்றியாளருக்கு RM23,000, இரண்டாம் இடத்திற்கு RM15,000, மூன்றாம் இடத்திற்கு RM10,000 மற்றும் நான்காவது முதல் 15 வது இடங்கள் வரை RM200 மதிப்புள்ள ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும்" என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார். .
மேலும், போட்டியில் பங்கேற்பதற்கு RM100 கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், முதல் 300 பங்கேற்பாளர்களுக்கு 20 அதிர்ஷ்டக் குலுக்கல் பரிசுகளுடன் இலவச டி-சர்ட் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இப்போட்டியில் பாத்தின், ரோஹு, தொங்சன், ஜெலவத் மற்றும் பாச்சு போன்ற மீன் வகைகளை ஏற்பாடு செய்துள்ளதாக ஷாரின் கூறினார். பங்கேற்பதற்கான விண்ணப்படிவம் மற்றும் நிபந்தனைகளை www.mbsa.gov.my இல் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது வழங்கப்பட்ட QR குறியீட்டை ஸ்கேன் செய்யலாம்.
ஏதேனும் கேள்விகள் இருந்தால் ஷா ஆலம் மாநகராட்சி லேண்ட்ஸ்கேப் துறையை 03-55105133 நீட்டிப்பு 1660, 1284 அல்லது 1215 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.








