SELANGOR

பத்தாங்காலி நிலச்சரிவு சம்பவத்தின் முழு அறிக்கை இன்று வெளியிடப்படும் - நட்மா

17 அக்டோபர் 2023, 9:01 AM
பத்தாங்காலி நிலச்சரிவு சம்பவத்தின் முழு அறிக்கை இன்று வெளியிடப்படும் - நட்மா

ஷா ஆலம், அக் 17: கடந்த ஆண்டு 31 பேரை பலிக் கொண்ட பத்தாங்காலி நிலச்சரிவு சம்பவத்தின் முழு அறிக்கை இன்று பிற்பகல் 5 மணிக்கு வெளியிடப்படும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையை ஏஜென்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பொதுமக்கள் பார்ப்பதற்காக வெளியிடப்படும் என்று உத்துசான் மலேசியா நேற்று செய்தி வெளியிட்டுள்ளது என டத்தோ கைருல் ஷஹரில் இட்ரிஸ் தெரிவித்தார்.

"நாட்மாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிடுவோம். அறிக்கை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும்" என்று அவர் கூறினார்.

அக்டோபர் 5 அன்று, அரசாங்கக் கூட்டக் குழுவின் கூட்டு முடிவின் விளைவாகப் பத்தாங்காலி நிலச்சரிவு சம்பவத்தின் முழு அறிக்கையையும் வெளியிட மாநில அரசு ஒப்புக்கொண்டது.

பொதுப்பணித்துறை அமைச்சகத்தின் அறிக்கை கடந்த செப்டம்பர் மாதம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் மாநில அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது என டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியிம் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.