SELANGOR

பொது சுகாதாரத் துறையை வலுப்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது

16 அக்டோபர் 2023, 6:28 AM
பொது சுகாதாரத் துறையை வலுப்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது

கிள்ளான், அக் 16: அடுத்த ஆண்டு பொது சுகாதாரத் துறையை வலுப்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும் ஆரம்பக் காலக் கட்டத்திலேயே ஒரு நோயைக் கண்டறிந்து தடுப்பது மிகவும் முக்கியம் என்று பொது சுகாதார எஸ்கோ ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.

"நான் சிலாங்கூர் யூபென் (பொருளாதார திட்டமிடல் பிரிவு) உடன் விவாதித்தேன், அதாவது தடுப்பு திட்டங்களைச் செயல்படுத்துவது உண்மையில் முக்கியமானது என்று நாங்கள் நினைக்கிறோம்.

"அடுத்த ஆண்டு தடுப்புத் திட்டங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உத்தேசித்துள்ளோம். மேலும் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய சுகாதாரப் பரிசோதனைக்கு உட்படுத்த அதிகமான நபர்களை ஊக்குவிக்கிறோம்," என்று அவர் கூறினார்.

ஜாலான் பத்து தீகா தேசியப் பள்ளியில் நேற்று நடைபெற்ற சிலாங்கூர் அனாக் சிஹாட் (ஏஏஎஸ்ஏஎஸ்) கார்னிவல் விழாவில் கலந்து கொண்ட பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.

அடுத்த ஆண்டு மாநில வரவு செலவுத் திட்டம் பற்றி கருத்து தெரிவித்த ஜமாலியா, சுகாதார இலாகாவுக்கான ஒதுக்கீடுகள் சிறந்த முறையில் பயன்படுத்தப்படுவதை தனது தரப்பு உறுதி செய்யும் என்றார்.

"ஒவ்வொரு எஸ்கோவும் நிச்சயமாக கூடுதல் நிதியை விரும்புகிறோம், ஆனால் அது டத்தோ மந்திரி புசார் டத்தோ' ஶ்ரீ அமிருடின் ஷாரி திட்டமிடும் மேம்பாட்டைப் பொறுத்தது என்றார்.

"இருப்பினும், கூடுதல் நிதி கிடைத்தாலும் அல்லது கிடைக்காவிட்டாலும், பொது சுகாதாரத்தின் அம்சத்திலிருந்து சுகாதார இலாகா அதிக செயல்திறன் கொண்டதாக இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம்," என்று அவர் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.