SELANGOR

நீர்ப் பிடிப்புக் குளத்தில் மாசு ஏற்பட்டதால் தொழிற்சாலையை மூட உத்தரவு

12 அக்டோபர் 2023, 11:49 AM
நீர்ப் பிடிப்புக் குளத்தில் மாசு ஏற்பட்டதால் தொழிற்சாலையை மூட உத்தரவு

ஷா ஆலம், அக் 12: தாமான் இண்டஸ்ட்ரி ஆலம் ஜெயா, புஞ்சாக் ஆலம் நீர்ப்பிடிப்புக் குளத்தில் மாசு ஏற்பட்டதால், காலாவதியான உறைந்த கடல் உணவை பதப்படுத்தி அகற்றும் தொழிற்சாலையை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்தொழிற்சாலை கடல்நீரை நேரடியாக அருகில் உள்ள பள்ளத்தில் வெளியேற்றுவது கண்டறியப்பட்டதாகவும், கழிவுகள் நீர்ப்பிடிப்பு குளத்தில் கலந்ததாகவும் கோலா சிலாங்கூர் நகராண்மை கழகம் (எம்.பி.கே.எஸ்) கூறியது.

துர்நாற்றம், நீர் மாசுபாடு மற்றும் நீர்ப்பிடிப்புக் குளத்தில் இறந்த ஆயிரக்கணக்கான மீன்கள் பற்றிய பொதுமக்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் (LUAS) மற்றும் சுற்றுச்சூழல் துறை (JAS) இணைந்து நேற்று ஒரு கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டன.

"எம்பிகேஎஸ் உள்ளாட்சி சட்டம் 1976, MDKS வர்த்தகம், வணிகம் மற்றும் தொழில்துறை உரிமம் விதி 2007ன் கீழ் நான்கு அபராதங்கள் மற்றும் தொழிற்சாலையிலிருந்து கழிவுநீரை உற்பத்தி செய்வதைத் தடை செய்யும் நோட்டீஸ்யும் வழங்கப்பட்டன.

"கேடிஇபி வேஸ்ட் மேனேஜ்மென்ட் (கேடிஇபிடபிள்யூஎம்) மூலம் ஒரே நாளில் கழிவுகளை அப்புறப்படுத்தவும் அத்தொழிற்சாலைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டது.

``ZDP`` தொழிற்சாலைகள் மற்றும் வணிக வளாகங்களில் கவனம் செலுத்துகிறது, கழிவுநீரை (ரசாயன கழிவுகள் அல்லது கழிவுநீர்) மறுசுழற்சி செய்ய கட்டாயப்படுத்துவதோடு ஆற்றில் அகற்றுவதைத் தடுக்கிறது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.