SELANGOR

அசுத்தமான ஆறு உணவகங்கள் மூட உத்தரவு - கிள்ளான் மாநகராட்சி

12 அக்டோபர் 2023, 8:44 AM
அசுத்தமான ஆறு உணவகங்கள் மூட உத்தரவு - கிள்ளான் மாநகராட்சி

ஷா ஆலம், அக்.12: ஜாலான் அமான் பெர்டானா 10C/KU5, தாமான் அமான் பெர்டானா, கிள்ளானைச் சுற்றியுள்ள ஆறு உணவு வளாகங்கள் அசுத்தமான சூழலில் இருந்ததன் காரணமாக நேற்று தொடங்கி 14 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டது.

அனைத்து வளாகங்களும் 50 சதவீதத்திற்கும் குறைவாக மதிப்பெண் பெற்றதாகவும், ஆய்வின் அடிப்படையில் தர மதிப்பீட்டிற்குத் தகுதி பெறவில்லை என்றும் கிள்ளான் மாநகராட்சி கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் இயக்குனர், கூறினார்.

"எனவே, துப்புரவு பணிகளை மேற்கொள்வதற்காக இந்த வளாகங்கள் அனைத்தையும் மூட உத்தரவிட்டோம், இந்த உணவகங்களில் விற்கப்படும் உணவுகள் பொதுமக்கள் சாப்பிடுவதற்குப் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்தோம்" என்று நோர்பிசா மஹ்ஃபிஸ் கூறினார்.

சிறு சட்டம் (UUK) 62 (1) b உணவு நிறுவல் எம்பிகே 2007இன் கீழ் இந்நிடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கிடையில், உணவகங்களின் தூய்மை குறித்து பொதுமக்கள் எப்பொழுதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்,

"சுத்தம் தொடர்பான விஷயங்களில் எம்பிகே சமரசம் செய்யாது, ஏனெனில் இது மக்களின் வாழ்க்கையை உள்ளடக்கியது மற்றும் தொழில்முனைவோர் தங்கள் கடைகளின் தூய்மையைத் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்," என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.