SELANGOR

சர்வதேச ஹலால் தயாரிப்புக் கண்காட்சியில் தான் வழிகாட்டிய தொழில்முனைவோரை முன்னிலைப்படுத்த பிகேஎன்எஸ் எண்ணம் கொண்டுள்ளது 

7 அக்டோபர் 2023, 11:58 AM
சர்வதேச ஹலால் தயாரிப்புக் கண்காட்சியில் தான் வழிகாட்டிய தொழில்முனைவோரை முன்னிலைப்படுத்த பிகேஎன்எஸ் எண்ணம் கொண்டுள்ளது 

ஷா ஆலம், அக் 7: 2025 ஆம் ஆண்டு ஒசாகா, ஜப்பானில் நடைபெறும் சர்வதேச ஹலால் தயாரிப்புக் கண்காட்சியில் தான் வழிகாட்டிய தொழில்முனைவோரை முன்னிலைப்படுத்த சிலாங்கூர் மாநில வளர்ச்சிக் கழகம் (பிகேஎன்எஸ்) விரும்புகிறது.

வணிகக் கண்காட்சியானது தொழில்முனைவோருக்கு உலக அளவில் வர்த்தகம் மற்றும் முதலீட்டு திறனை உருவாக்குவதற்கான வாய்ப்பை அளித்துள்ளது என அதன் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ மஹ்மூத் அப்பாஸ் கூறினார்.

"ஒசாகாவில் நடைபெறும் சர்வதேச ஹலால் தொழில்முனைவோர் கண்காட்சிக்கு 25 முதல் 50 தொழில்முனைவோரை அனுப்ப நாங்கள் இலக்கு வைத்துள்ளோம். ஏனெனில் இதன் மூலம், அவர்கள் தங்கள் திறனை இன்னும் பரவலாக விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது.

"அந்த இலக்கை அடைய, ஏற்கனவே ஏற்றுமதி துறையில் சிறந்த விளங்கும் மற்றும் வளர விரும்பும் தொழில்முனைவோர் தேவை, மேலும் நாங்கள் திறமையான தொழில்முனைவோருக்கு வழிகாட்டுகிறோம்," என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இன்று செத்தியா சிட்டி கன்வென்ஷன் சென்டரில் (SCCC) நடைபெற்ற சிலாங்கூர் பிசினஸ் எக்ஸ்போ 2023 (SELBIZ 2023) தொடக்க விழாவிற்குப் பிறகு அவர் இவ்வாறு கூறினார். இந்நிகழ்வு தொழில்முனைவோர் எஸ்கோ நஜ்வான் ஹலிமியால் திறந்து வைக்கப்பட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் ஷா ஆலம் கன்வென்ஷன் சென்டரில் (SACC) நடைபெற்ற SELBIZ இன் முதல் பதிப்பு 149 கண்காட்சியாளர்கள் மற்றும் 5,000 பார்வையாளர்களின் பங்கேற்பை வெற்றிகரமாக ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.