சுபாங் ஜெயா, அக் 4: மாநிலத்தில் பின்பற்றப்படும் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளை அனைவரும் அறிந்திருக்கும் வகையில் ரும்புன் சிலாங்கூர் திட்டத்தை மாநில அரசு தொடங்கவுள்ளது.
கலை மற்றும் கலாச்சாரத்தின் கூறுகளைப் பயன்படுத்தும் இத்திட்டம் அனைத்து மாவட்டங்களையும் ஆராய்ந்து ஒவ்வொரு பகுதியின் சிறப்பு அம்சங்களையும் எடுத்துக் காட்டும் என்று ஒற்றுமை எஸ்கோ டத்தோ ரிசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.
"#கித்தா சிலாங்கூர் கருப்பொருளுக்கு இணங்க இந்த திட்டம் நகரப்புற மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கும் தொடர்புடையது. இப்போது நாங்கள் திட்டத்தை வகுத்து வருகிறோம், இதன் மூலம் அத்திட்டம் சீராக இயங்கி அதன் இலக்குகளை அடையும்.
"பம்பரம், கால்பந்து மற்றும் வழுக்கும் கம்பத்தில் ஏறுதல் போன்ற நாட்டுப்புற விளையாட்டுகள் ஆகியவை சிறப்பிக்கப்படும் பாரம்பரியங்களில் அடங்கும்" என்று அவர் நேற்று மீடியா சிலாங்கூர் உடனான நேர்காணலின் போது கூறினார்.
ரும்புன் சிலாங்கூர் குடியிருப்பாளர்கள் தங்கள் கிராமங்களை அலங்கரிக்கவும் அழகுபடுத்தவும் ஒரு தளமாக மாறும் என சுங்கை ஆயர் தவாரின் பிரதிநிதி கூறினார்.
"இந்த திட்டத்தின் மூலம் சுற்றுச்சூழலையும் குடியிருப்பு நிலப்பரப்பையும் அழகுபடுத்த குடியிருப்பாளர்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம். இது அப்பகுதியை உற்சாகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவ்விடத்தில் ஒத்துழைப்பையும் ஒருமித்த கருத்தையும் உருவாக்குகிறது," என்று அவர் கூறினார்.








