SELANGOR

எம்பிஐ 57 சிலாங்கூர் பொதுக் காப்பீட்டு திட்ட (இன்சான்) இழப்பீட்டை நிறைவு செய்துள்ளது - RM669,000

4 அக்டோபர் 2023, 3:21 AM
எம்பிஐ 57 சிலாங்கூர் பொதுக் காப்பீட்டு திட்ட (இன்சான்) இழப்பீட்டை நிறைவு செய்துள்ளது - RM669,000

கோம்பாக், அக் 4: சிலாங்கூர் மந்திரி புசார் (கட்டமைப்பு) அல்லது எம்பிஐ இதுவரை மொத்தம் RM669,000 மூலம் 57 சிலாங்கூர் பொதுக் காப்பீட்டுத் திட்ட (இன்சான்) இழப்பீட்டை நிறைவு செய்துள்ளது.

கடந்த ஜனவரியில் இருந்து தனது தரப்பில் 129 உரிமைகோரல்கள் கிடைத்துள்ளன. இருப்பினும் சில விண்ணப்பங்கள் இன்னும் செயல்பாட்டில் உள்ளன என அதன் தலைமை இயக்க அதிகாரி சைபொல்யாசன் எம் யூசோப் தெரிவித்தார்.

"ஓட்டுனர் உரிமம், சாலை வரி மற்றும் வேறு சில ஆவணங்கள் இல்லை போன்ற தாமதச் சிக்கல்களை ஒப்புதல் பெறுவதற்கு முன் ஆய்வு செய்ய வேண்டும்," என்று அவர் கூறினார்.

பத்து ஆரங்கில் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த மாநிலத்தில் வசிக்கும் குழந்தைகள் (30 நாட்கள்) முதல் 80 வயது பெரியவர்கள் வரை அனைத்து குடிமக்களையும் பாதுகாப்பதற்காக இன்சான் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆறு மில்லியன் மக்களை இலக்காகக் கொண்ட இந்தத் திட்டம், நிரந்தர ஊனம் மற்றும் விபத்துக்களால் மரணம் அடைந்தால் RM10,000 வரை பாதுகாப்பு அளிக்கிறது.

கடந்த ஆகஸ்ட் தொடக்கத்தில், இன்சான் தக்காஃபுல் திட்டத்தை வழங்குவதன் மூலம் மேம்படுத்தப்பட்டது. இது RM10,000 நிதி உதவியை வழங்குகிறது. அதே நேரத்தில் மரணம் ஏற்பட்டால் அவர்களின் வாரிசுகள் RM1,000 பெறுவார்கள்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.