SELANGOR

தொழில்முனைவோர் யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் நிதித் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு

29 செப்டெம்பர் 2023, 3:39 AM
தொழில்முனைவோர் யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் நிதித் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு

ஷா ஆலம், செப் 29: தங்கள் வணிகத்தை டிஜிட்டல் முறையில் மாற்ற விரும்பும் தொழில் முனைவோர் யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் நிதித் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

கோ டிஜிட்டல் திட்டம் RM50,000 வரை நிதியுதவி அளிக்கிறது என்றும், mikrokredit.selangor.gov.my அல்லது ஹிஜ்ரா கிளையில் உள்ள அதிகாரிகளைத் தொடர்பு கொள்வதன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் முகநூலில் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

" தொழில் முனைவோர் சமீபத்திய மற்றும் நவீன தளங்கள் மூலம் டிஜிட்டல் மயமாக்கலுக்கு வணிக முறைகளை மாற்ற உதவுவதற்காக கோ டிஜிட்டல் திட்டம் உருவாக்கப்பட்டது.

"மேலும், இத்திட்டம் டிஜிட்டல் மார்க்கெட்டிங் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் சந்தைப்படுத்துவதற்கான திறனை அதிகரிக்க உதவுகிறது. இதன் வழி இணைய விற்பனையில் லாபத்தை அதிகரிக்க முடியும். மேலும் தகவலுக்கு www.hijrahselangor.com ஐப் பார்வையிடவும்," என்று தெரிவிக்கப்பட்டது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.