ஷா ஆலம், செப் 26: இன்று மாலை வரை சிலாங்கூரில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் மற்றும் பலத்த காற்றும் வீசும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவை கோலா சிலாங்கூர், உலு சிலாங்கூர், கோம்பாக், உலு லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய மாவட்டங்கள் ஆகும் என்று முகநூல் வழியாக மெட்மலேசியா தெரிவித்துள்ளது.
இதே வானிலை தான் லாபுவான், கோலாலம்பூர், பேராக், பகாங், நெகிரி செம்பிலான், ஜொகூர், சரவாக் மற்றும் சபா ஆகிய மாநிலங்களிலும் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெட் மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழையின் தீவிரம் மணிக்கு 20 மில்லி மீட்டர் அதிகமாக, ஒரு மணி நேரத்திற்கு அல்லது அதற்கும் மே
இடியுடன் கூடிய மழையின் முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகிய கால எச்சரிக்கை ஆகும்.
சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்குப் பொதுமக்கள் http://www.met.gov.








