SELANGOR

டிரெய்லர் டிரைவர் மீது நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்படும்

25 செப்டெம்பர் 2023, 7:21 AM
டிரெய்லர் டிரைவர் மீது நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்படும்

புத்ராஜெயா, செப் 25: ஜாலான் பெர்சியாரான் உத்ரா, கிலோமீட்டர் 5.7 இல் பூச்சோங் நோக்கி செல்லும் சாலையில் ஏற்பட்ட விபத்தில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு காரணமாக இருந்த டிரெய்லர் டிரைவர் மீது புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்படும்.

அந்த ஓட்டுநர் (29) மீது சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 ன் பிரிவு 41(1)ன் கீழ் குற்றம் சாட்டப்படும் என புத்ராஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏ.சி.பி. ஏ. அஸ்மாதி அப்துல் அஜீஸ் கூறினார்.

"ஒ.கே.தி (குற்றம் சாட்டப்பட்ட நபர்) குற்றச்சாட்டிற்காக நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்தார்" என்று அவர் கூறினார்.

முன்னர், சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 ன் பிரிவு 41 (1) இன் கீழ் காவல்துறையினர் விசாரணை நடத்துவதற்கு ஏற்ற வகையில் ஓட்டுனர் நான்கு நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.

கடந்த புதன்கிழமை காலை 10.14 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், பெர்சியாரான் உத்ராவில் 13 வாகனங்கள் மீது டிரெய்லர் மோதியதில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் இறந்தனர், ஏழு பேர் காயமடைந்தனர்.

``Le Tour de Langkawi (LTDL) கொன்வாய் பயிற்சிக்காகச்`` சம்பவம் நடந்த இடத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.