ஷா ஆலம், செப்.25: இன்று காலை 10 மணிக்குக் கோழி, மீன், முட்டை, அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்களை மலிவு விலையில் விற்பனை செய்யும் ஜுவாலான் ஏஹ்சான் ரஹ்மா திட்டம் மூன்று இடங்களில் தொடர்கிறது.
அந்நிகழ்வு சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைமையகம், யுஎஸ்ஜே 8 (சுபாங் ஜெயா), லாமன் நியாக @ அம்பாங் வாட்டர்ஃபிரண்ட் (லெம்பா ஜெயா) மற்றும் தாமான் ஸ்ரீ புத்ரி மேரு (மேரு) ஆகிய இடங்களில் நடைபெறும் என சிலாங்கூர் வேளாண்மை வளர்ச்சிக் கழகம் (பிகேபிஎஸ்) அறிவித்தது. .
இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் மாட்டிறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும்
விற்கப்படுகிறது.
பொதுமக்கள் பி.கே.பி.எஸ் முகநூல் அல்லது http://linktr.








