ஷா ஆலம், செப் 25: இன்று மதியம் 12 மணி வரை சிலாங்கூரில் உள்ள ஆறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் மற்றும் பலத்த காற்று வீசும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவை சபாக் பெர்ணம், கோலா சிலாங்கூர், கிள்ளான், கோலா லங்காட், உலு லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய மாவட்டங்கள் ஆகும் என முகநூலில் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதே வானிலை கெடா, பேராக், பகாங், நெகிரி செம்பிலான், புத்ராஜெயா மற்றும் பினாங்கில் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மெட் மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழையின் தீவிரம் மணிக்கு 20 மில்லி மீட்டர் அதிகமாக, ஒரு மணி நேரத்திற்கு அல்லது அதற்கும் மே
இடியுடன் கூடிய மழையின் முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகிய கால எச்சரிக்கை ஆகும்.
சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்குப் பொதுமக்கள் http://www.met.gov.








