SELANGOR

புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சுமையைக் குறைக்க பண உதவி - எம்பிஐ

21 செப்டெம்பர் 2023, 8:33 AM
புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சுமையைக் குறைக்க பண உதவி - எம்பிஐ

காஜாங், செப் 21: கடந்த செவ்வாய்கிழமை பெரானாங்கில் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சுமையைக் குறைக்க சிலாங்கூர் மந்திரி புசார் (கட்டமைப்பு) அல்லது எம்பிஐ பண உதவியை வழங்கும்.

ரொக்கத் தொகையை மாநில ஆட்சிகுழு கூட்டத்தில் (எம்எம்கேஎன்) முடிவு செய்ததாகக் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு மற்றும் பெருநிறுவன தகவல் தொடர்புத் தலைவர் தெரிவித்தார்.

"ஒவ்வொரு முறையும் பேரழிவு ஏற்படும் போது எம்பிஐ யிடம் இருந்து நிதி உதவி கிடைக்கும். தொண்டு நிறுவனப் பங்களிப்பு கண்ணோட்டத்தில் எம்பிஐ எவ்வாறு உதவலாம் என்பது குறித்து பேரிடர் மேலாண்மைப் பிரிவிடம் நான் ஏற்கனவே பூர்வாங்க விவாதங்களை நடத்தியுள்ளேன்.

" மாநில அரசாங்கத்துடன் இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவோம் " என்று அஹ்மத் அஸ்ரி சைனல் நோர் கூறினார்.

நேற்று பெரானாங்கில் உள்ள சுராவ் தெங்கா கம்போங் செசபான் பத்து ரெம்பாவில் உள்ள தற்காலிக தங்கும் மையத்தில் (பிபிஎஸ்) தஞ்சம் அடைந்துள்ள பாதிக்கப்பட்டவர்களின் நிலையை ஆய்வு செய்த பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.

எம்பிஐ பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவிகளை வழங்க RM5, 000 ஒதுக்கியுள்ளது.

சேதமடைந்த குடியிருப்பாளர்களின் வீடுகளின் கூரைகள் சீக்கிரம் பழுது பார்ப்பதற்காகக் கம்போங் சேசபன் பத்து ரெம்பாவின் கிராம சமூக மேலாண்மை கவுன்சிலுக்கும் (எம்.பி.கே.கே) கம்போங் சேசபன் பத்து மினாங்கபாவின் எம்.பி.கே.கே.க்கும் ரிம 20,000 ஒதுக்கீடு செய்வதாகவும் அவர் உறுதியளித்தார்.

இரவு 7 மணியளவில் பெரானாங்கைத் தாக்கிய புயலால் 96 குடியிருப்பாளர்களின் குடியிருப்புகள் பாதிக்கப் பட்டதில் 370 பேர் பாதிக்கப்பட்டனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.