ஷா ஆலம், செப் 21: சுகாதார நடைமுறையின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இலவச மருத்துவப் பரிசோதனை திட்டத்தைப் பண்டார் பாரு கிள்ளான் தொகுதியின் சமூக சேவை மையம் ஏற்பாடு செய்துள்ளது.
அந்நிகழ்வில் உடல் பரிசோதனை, ரத்த அழுத்தப் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை, ரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் சிறுநீர் பரிசோதனை உள்ளிட்ட சுகாதாரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று பண்டார் பாரு கிள்ளானின் மக்கள் பிரதிநிதி தெரிவித்தார்.
"இப்போது அரசு சாரா நிறுவனங்கள் (என்ஜிஓக்கள்) உட்பட பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடல் நிலையில் உள்ளது. இந்த திட்டம் அக்டோபரில் தொடங்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
"நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் ஆரம்பத்திலிருந்தே தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கான மற்றும் வழக்கமான உடல்நலப் பரிசோதனையின் முக்கியத்துவத்தைப் பற்றி மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என டாக்டர் குவா பெர்ங் ஃபீ சிலாங்கூர்கினியிடம் கூறினார்.
"இந்நிகழ்வை ஒவ்வொரு மாதமும் நாங்கள் செய்ய முடிந்தால், அது சிறப்பாக இருக்கும். இதன் மூலம், பண்டார் பாரு கிள்ளானில் வசிப்பவர்கள் இலவச மருத்துவ பரிசோதனைகளைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்க முடியும்," என்று அவர் கூறினார்.
கடந்த ஆண்டு சிலாங்கூர் சாரிங் திட்டத்தின் மூலம் இலவசச் சுகாதார பரிசோதனை திட்டத்திற்காக RM3.1 மில்லியன் ஒதுக்கீட்டை மாநில அரசு வழங்கியது.
உடல் பரிசோதனைகள், இரத்தம் மற்றும் நீரிழிவு சோதனைகள், கண், கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பகப் புற்றுநோய், பெருங்குடல் மற்றும் புரோஸ்டேட் இரத்தப் பரிசோதனைகள் ஆகியவை மருத்துவ பரிசோதனைகளில் அடங்கும்.








