SELANGOR

200 குடும்பங்கள் அடிப்படை உணவு பொருட்களை நன்கொடையாகப் பெற்றனர்

20 செப்டெம்பர் 2023, 10:29 AM
200 குடும்பங்கள் அடிப்படை உணவு பொருட்களை நன்கொடையாகப் பெற்றனர்

ஷா ஆலம், செப் 20: கடந்த ஞாயிற்றுக்கிழமை ரெபானா பண்டார் புக்கிட் ராஜா, கிள்ளானில் மொத்தம் 200 குடும்பங்கள் அரிசி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை உணவு பொருட்களை நன்கொடையாகப் பெற்றனர்.

தொகுதியின் சமூக சேவை மையத்தின் மூலம் சுமார் RM50 மதிப்புள்ள உணவுப் பைகள் விநியோகம் செய்யப்பட்டதாகப் பண்டார் பாரு கிள்ளானின் சட்டமன்ற உறுப்பினர்  கூறினார்.

தகுதியுடைய ஒவ்வொரு பெறுநருக்கும் சமையல் எண்ணெய், உப்பு, சர்க்கரை, உலர் நூடுல்ஸ், உடனடி நூடுல்ஸ், பிஸ்கட் மற்றும் டின் உணவு ஆகியவை வழங்கப்பட்டது என்று டாக்டர் குவா பெர்ங் ஃபெய் தெரிவித்தார்.

"சமையலறைச் செலவுகளின் சுமையைக் குறைக்க இந்த உதவி மேற்கொள்ளப்படுகிறது குறிப்பாகக் குறைந்த வருமானம் கொண்ட குழு (B40)க்கு ஆகும்" என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

உள்ளூர் சமூகத்தின் தேவைகள் மற்றும் நலனில் தனது தரப்பு மிகவும் அக்கறை கொண்டுள்ளது. எனவே மக்களின் நலன் தொடர்பான திட்டங்கள் எப்போதும் முன்னுரிமை அளிக்கப்பட்டு தொடரப்படும் என குவா பெர்ங் ஃபெய் தெரிவித்தார்.

"உள்ளூர் சமூகத்தின் நலனே எனது முன்னுரிமை, எனவே இந்த பகுதியில் வசிப்பவர்களின் நல்வாழ்வுக்காக நாங்கள் தொடர்ந்து உதவி மற்றும் சேவை வழங்குவோம்," என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.