ஷா ஆலம், செப் 13: செப்டம்பர் 21 அன்று நடைபெறும் இ-டகாங் கருத்தரங்கு #4ல் பங்கேற்க இளம் தொழில்முனைவோரை ``Sprii Commerce`` அழைக்கிறது.
சிலாங்கூர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொருளாதார கழகத்தின் (Sidec) ஒத்துழைப்பைப் பெற்ற இந்தத் திட்டம், குறிப்பாக இளம் தொழில் முனைவோருக்கான நிதியுதவி வழங்குகிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
"பல்வேறு புதிய தளங்களைக் கொண்ட பரந்த டிஜிட்டல் வணிக உலகம் இளம் தொழில் முனைவோருக்கு வெற்றி பெற வாய்ப்புகளைத் திறக்கிறது.
Sidec, SAY, Hijrah Selangor, senangPay மற்றும் NexMind ஆகியவை மூலம் டிஜிட்டல் வணிக உலகம் குறித்து பங்கேற்பாளர்கள் வழிகாட்ட படுவார்கள் என Sprii Commerce கூறியது.
"இக்கருத்தரங்கு சிடெக், ஐசிட்டியில் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை நடைபெறும். இது இளைஞர்கள், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் எஸ்கோ நஜ்வான் ஹலிமியால் நடத்தப்படும்," என்று அவர் கூறினார்.
ஆர்வமுள்ளவர்கள் https://bit.ly/seminar_230921 வழியாக பதிவு செய்யலாம் அல்லது QR குறியீட்டை ஸ்கேன் செய்யலாம்.








