முன்னிட்டு இந்த சனிக்கிழமை அன்று கோலாலம்பூரைச் சுற்றியுள்ள
பொது இடங்களில் 1,000க்கும் மேற்பட்ட ஜாலோர் கெமிலாங் புத்ரா
மலேசியா பல்கலைக்கழகத்தைச் (யுபிஎம்) சேர்ந்த 50க்கும் மேற்பட்ட
மாணவர்கள் விநியோகிக்க உள்ளனர்.
ஜமேக் மசூதி மற்றும் புக்கிட் பின்தாங் போன்ற இடங்களில் கொடி
விநியோகிக்கப்படும் என்று யுபிஎம் மாணவர் பிரதிநிதி கவுன்சில்
துணைத் தலைவர் உமைரா ஃபரிசா அஹ்மத் யுஸ்ரி கூறினார்.
இந்த திட்டம் தேசப்பற்று உணர்வை எழுப்புவதையும், பல்வேறு
பின்னணியைச் சேர்ந்த மாணவர்களிடையே ஒற்றுமையின்
பிணைப்பை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர்
பெர்னாமாவிடம் கூறினார்.
பல்கலைக்கழக மாணவர்களிடையே மலேசியா தினத்தை
கொண்டாடுவதன் முக்கியத்துவம் குறித்து, நாடு சுதந்திரம் அடைந்த
பிறகு பிறந்தாலும், நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில்
மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் முக்கியத்துவத்தை இலகுவாக
எடுத்துக் கொள்ளக்கூடாது என்றார்.
நாட்டின் வளர்ச்சியில் மாணவர்கள் மிகவும் முக்கியமானவர்கள்,
அவர்கள் அறிவாற்றல், புதுமை மற்றும் பொறுப்புள்ள மாணவர்களாக
இருப்பதன் மூலம் சமூகத்தின் முன்னேற்றத்திற்கும்
நல்லிணக்கத்திற்கும் பங்களிக்க முடியும். மலேசியா தினத்தை கொண்டாடுவது
என்று அம்மாணவர் தெரிவித்தார்.
1963 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி மலாயா, சபா மற்றும்
சரவாக் கூட்டமைப்புக்கு இடையே மலேசியா உருவானதை
நினைவுகூரும் வகையில் மலேசியா தினம் கொண்டாடப்படுகிறது.
– பெர்னாமா








