SELANGOR

விவசாயிகளுக்கு 150 ஏக்கர் நிலத்தை சிலாங்கூர் புரூட் வெளி (SFV) வாடகைக்கு வழங்குகிறது

13 செப்டெம்பர் 2023, 9:07 AM
விவசாயிகளுக்கு 150 ஏக்கர் நிலத்தை சிலாங்கூர் புரூட் வெளி (SFV) வாடகைக்கு வழங்குகிறது

ஷா ஆலம், செப் 13: பயிர்களை விரிவுபடுத்த விரும்பும் விவசாயிகளுக்கு 150 ஏக்கர் நிலத்தை பெஸ்டாரி ஜெயாவில் உள்ள சிலாங்கூர் புரூட் வெளி (SFV) வாடகைக்கு வழங்குகிறது.

உயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யும் காய்கறிகளைத் தவிர குறுகிய காலப் பயிர்களை இயக்குபவர்களுக்கு இந்த சலுகை திறக்கப்பட்டுள்ளது என்று அதன் மூத்த உதவி மேலாளர் ராஜா முகமட் ஃபைஸ் ராஜா பசாய்ட் விளக்கினார்.

நிலத்தில் பயிரிட 50 விவசாயிகளை இலக்காகக் கொண்டுள்ள நிலையில் ஒவ்வொரு ஏக்கருக்கும் பயிர் வகையைப் பொறுத்து மாதந்தோறும் RM80 முதல் RM120 வரை வசூலிக்கப்படும் என்றார்.

"இந்த விவசாயிகள் ஒரு நபருக்கு மூன்று ஏக்கர் மதிப்பீட்டில் நிலத்தை பயிரிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். இருப்பினும், பயிர்கள் நன்றாக இருந்தால், நாங்கள் அதிக நிலத்தை வழங்குவோம்.

"அவர்களின் பயிர்கள் மினி கார்னிவலில் சந்தைப்படுத்தப்படும். மேலும் சிலாங்கூர் புரூட் வெளி அவற்றை எஹ்சான் ரஹ்மா விற்பனைப் பொருட்களுக்காக வாங்கும்," என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

ஆர்வமுள்ள விவசாயிகள் ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சிலாங்கூர் புரூட் வெளியில் RM15 விலையுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பெறலாம். இது அக்டோபர் தொடக்கம் வரை திறந்திருக்கும் என்று ராஜா முகமட் ஃபைஸ் கூறினார்.

"இதுவரை 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்வம் காட்டியுள்ளனர். உண்மையில் ஆர்வமுள்ளவர்கள் மட்டுமே சலுகையைப் பெற தகுதியுடையவர்கள் என்பதை உறுதிப்படுத்த அவர்கள் நேர்காணல் அமர்வுக்கு உட்படுத்தப்படுவார்கள்," என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.