SELANGOR

காசிஹ் மலேசியா உடல் ஊனமுற்றோர் பராமரிப்பு மையத்திற்கு RM10,000 நன்கொடையாக வழங்கியது

13 செப்டெம்பர் 2023, 5:29 AM
காசிஹ் மலேசியா உடல் ஊனமுற்றோர் பராமரிப்பு மையத்திற்கு RM10,000 நன்கொடையாக வழங்கியது

ராவாங், செப்டம்பர் 13: பெர்துபோஹான் கெபாஜிகான் அமால் சிலாதுராஹிம் ஸ்திரி-ஸ்திரி ஹரப்பான் மலேசியா (காசிஹ் மலேசியா) இன்று மெர்டேக்கா விசிட் திட்டத்தின் மூலம் திதியான் ஓகேயு நோர் உடல் ஊனமுற்றோர் பராமரிப்பு மையத்திற்கு RM10,000 நன்கொடையாக வழங்கியது.

இந்த நன்கொடையை காசிஹ் மலேசியாவின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் அவர்கள் பராமரிப்பு மையத்தின் புரவலர் நோர்மா அட்லானிடம் வழங்கினார்.

அரசு சாரா அமைப்பு (என்ஜிஓ) என்ற வகையில், இந்நாட்டில் உள்ள முதியோர் மற்றும் ஏழைகளின் நலனைக் கவனிப்பதில் இந்த அமைப்பு அக்கறை கொண்டுள்ளது என்று பிரதமரின் மனைவி கூறினார்.

"காசிஹ் மலேசியா எப்போதும் உதவ வேண்டிய தொண்டு நிறுவனங்களை அடையாளம் காண முயற்சிக்கிறது. அதில் இன்று நாங்கள் புசாட் ஜாகான் திதியான் ஓகேயு நோரைத் தேர்ந்தெடுத்தோம்,`` என்றார்.

"இந்த நன்கொடை காசிஹ் மலேசியாவிலிருந்து மட்டுமல்ல, உணவு வங்கி மலேசியாவிடமிருந்தும் பெறப்பட்டது ஆகும். உணவு, மற்றும் அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது" என்று அவர் சிலாங்கூர்கினியைச் சந்தித்தபோது கூறினார்.

இதற்கிடையில், குழந்தைகள் முதல் 90 வயது முதியவர்கள் வரை பராமரிப்பு மையத்தில் வசிக்கும் 86 பேருக்கு உதவியதற்குத் தனது தரப்பு நன்றி தெரிவித்ததாக நோர்மா கூறினார்.

"இங்குள்ளவர்கள் டவுன் சிண்ட்ரோம் போன்ற குறைபாடுகள் உள்ளவர்கள் மற்றும் பலவீனமான நிலையில் உள்ள வயதானவர்களால் ஆவர்.

"என்ஜிஓக்கள், தனிநபர்கள், ஏஜென்சிகள் மூலம் நன்கொடைகள் நிறைய கிடைக்கின்றன. இங்கு ஒவ்வொரு மாதமும் இயக்க செலவு சுமார் RM50,000 ஆகும்," என்று நோர்மா கூறினார்.

விழாவில் சிலாங்கூர் பெண்கள் நலன் மற்றும் தொண்டு அமைப்பின் (பெகாவானிஸ்) தலைவரான டத்தோ மந்திரி புசாரின் மனைவியான டத்தின் ஶ்ரீ மர்டியானா முகமதுவும் கலந்து கொண்டார்.

அதே திட்டத்தில், மாநில இஸ்லாமிய மத கவுன்சிலும் (MAIWP) RM10,000த்தைத் தொண்டு நிறுவனத்திற்கு வழங்கியது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.