ஷா ஆலம், செப் 13- டிரெய்லர் லோரி
கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் அதன்
ஓட்டுநர் படுகாயங்களுக்குள்ளானார்.
இச்சம்பவம் கத்ரி நெடுஞ்சாலையின் டோல்
சாவடி அருகே நேற்று மாலை நிகழ்ந்தது.
இந்த விபத்து தொடர்பில் தங்களுக்கு மாலை
5.42 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாக
சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத்
துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி
இயக்குநர் அகமது முக்லிஸ் மொக்தார்
கூறினார்.
ரவாங் தீயணைப்பு மற்றும் மீட்பு
நிலையத்தைச் சேர்ந்த ஏழு பேர் கொண்ட குழு
இரண்டு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு
விரைந்தனர்.
மாலை 5.52 மணிக்கு இடத்தை அடைந்த
போது, கொள்கலன்களை ஏற்றிய ஸ்கேனியா
வகை டிரெய்லர் சாலையின் ஓரத்தில் கவிழ்ந்த
நிலையில் காணப்பட்டது என்று அவர்
தெரிவித்தார்.
தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பு 39
வயதான டிரெய்லர் ஓட்டுநரை லோரியின்
இடிபாடுகளிலிருந்து மீட்டனர். கடுமையான
காயங்களுக்குள்ளான அந்ந ஓட்டுநர்
சிகிச்சைக்காக மருத்துவப் பணியாளர்களிடம்
ஒப்படைக்கப்பட்டதாக அவர் கூறினார்.








