SELANGOR

டுசுன் துவா சிலாங்கூரின் சுற்றுலாத் தளமாக மேம்படுத்தப்படும்

8 செப்டெம்பர் 2023, 10:46 AM
டுசுன் துவா சிலாங்கூரின் சுற்றுலாத் தளமாக மேம்படுத்தப்படும்

ஷா ஆலம், செப் 8: டுசுன் துவா சிலாங்கூரின் சுற்றுலாத் தளமாக உருவாக அங்குள்ள சுற்றுலா இடங்களைப் பாதுகாப்பதன் மூலம் தொடர்ந்து மேம்படுத்தப்படும்.

சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங்குடன் ஏற்கனவே ஒரு சந்திப்பை நடத்தியதாகவும், அங்குள்ள சுற்றுலாத் தளங்களின் உள்கட்டமைப்பு மேம்பாடுகளின் அவசியத்தை தெரிவித்ததாகவும் அதன் பிரதிநிதி டத்தோ ஜோஹான் அப்துல் அசிஸ் தெரிவித்தார்.

டுசுன் துவா வடக்கில் நூஹாங் மலை, கபாய் நதி, மங்கீஸ் நதி, சொங்காக் நதி மற்றும்  பங்சுன் நதி போன்ற இயற்கை இடங்கள் உள்ளன என்று ஜோஹான் கூறினார்.

"மேலும், மூன்று சுடுநீர் குளங்களின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம், அங்குள்ள இயற்கை இடங்கள் தொடர்ந்து பாதுகாக்கப்படும்," என்று அவர் கூறினார்.

டுரியான், பூலாசன், மங்குஸ்தீன் உள்ளிட்ட பல்வேறு வகையான பழத்தோட்டங்கள் நிரம்பியிருக்கும் டுசுன் துவா பகுதி, பழப் பருவக் காலம் வரும்போது சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும்.

சுற்றுலாத் திறனை அதிகரிப்பதற்கான முயற்சிகளுடன், சாலை நெரிசல் பிரச்சனையிலும் கவனம் செலுத்தப்படும். குடியிருப்பாளர்கள் மற்றும் அப்பகுதிக்கு வருபவர்களின் வசதியை உறுதிப்படுத்த போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்குத் தீர்வு காண்பது மிகவும் அவசியம் என்றும் அவர் கூறினார்.

"உலு லங்காட்டைச் சுற்றியுள்ள சாலைகளில் ஏற்கனவே நெரிசல் அதிகமாக உள்ளது, அதிலும் விடுமுறை நாட்களில் இன்னும் நெரிசல் அதிகமாக  ஏற்படுகிறது. சமீபத்தில் உலு லங்காட்டின் பத்து 14 இல் ஆறு கிலோமீட்டர் வரை நெரிசல்  ஏற்பட்டதாக எனக்கு புகார் வந்தது.

"பத்து 14 இல் போக்குவரத்து தொடர்பான ஆவணங்கள் ஏற்கனவே உள்ளன என்பதை நான் புரிந்து கொள்கிறேன். மேலும் கூடுதல் முன்மொழிவுகள் மற்றும் பலவற்றை விவாதிக்க உலு லங்காட்டின் பொதுப்பணித் துறையுடன் (ஜேகேஆர்) ஒரு கூட்டத்தை நடத்துவோம்.

"அதுமட்டுமின்றி, உலு லங்காட்டின் பத்து 9 சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் மேம்பாலம் கட்டும் பணி 2026 ஆம் ஆண்டு மே மாதம் நிறைவடையும் என எதிர்பார்க்கப் படுகிறது, இதற்கு RM100 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.