ஷா ஆலம், செப் 8: ஜாலான் நூரி 7/19C, பிரிவு 7, கோத்தா டாமன்சாரா, பெட்டாலிங் ஜெயாவில் கார் மற்றும் வீட்டின் கூரை மீது விழுந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியை நேற்று பெட்டாலிங் ஜெயா மாநகராட்சியின் (எம்பிபிஜே) விரைவுப் படையினர் மேற்கொண்டனர்.
ஹோண்டா சிட்டி கார் மற்றும் வீட்டின் மேற்கூரை மீது மரம் விழுந்த சம்பவம் தொடர்பாக மாலை 4.15 மணியளவில் புகார் கிடைத்ததுள்ளது. அந்த புகாரின் பேரில் ஏழு விரைவுப் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர். மரத்தை அகற்றும் பணி முடிந்தவுடன் அடுத்த நடவடிக்கைக்காக துப்புரவுத் தரப்பிடம் ஒப்படைக்கப்படும்.








