SELANGOR

புயலால் பாதிக்கப்பட்ட 20 வியாபாரிகளுக்கும் உடனடி உதவி - கோத்தா டாமன்சாரா

29 ஆகஸ்ட் 2023, 9:41 AM
புயலால் பாதிக்கப்பட்ட 20 வியாபாரிகளுக்கும் உடனடி உதவி - கோத்தா டாமன்சாரா

ஷா ஆலம், ஆகஸ்ட் 29: நேற்று மாலை புயலால் பாதிக்கப்பட்ட கோத்தா டாமன்சாரா

செக்‌ஷன் 8ல் உள்ள பெகாக்கா உணவு கடைகளின் 20 வியாபாரிகளுக்கும் உடனடியாக

உதவி வழங்கப்படும்.

பண வடிவிலான வழங்கப்படும் உதவி மீண்டும் தொழில் தொடங்குவதற்கான

அவர்களின் சுமையைக் குறைக்கும் நோக்கத்தில் உள்ளது என்று கோத்தா டாமன்சாரா

பிரதிநிதி இசுவான் காசிம் கூறினார்.

ஒவ்வொரு வர்த்தகரின் சேதமும் ஒரே மாதிரியாக இருக்காது, நான் சிலாங்கூர் மந்திரி

புசார் (கட்டமைப்பு) அல்லது எம்பிஐயைத் தொடர்பு கொண்டு அவர்களுக்கு உடனடி

உதவி கிடைக்க முயற்சிப்பேன்,`` என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

நேற்று, இசுவான் சம்பவ இடத்துக்குச் சென்று, சம்பந்தப்பட்ட வியாபாரிகளை சந்தித்து

சேதத்தின் அளவை ஆய்வு செய்தார்.

“வியாபாரிகளுக்குப் பலத்த காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. கூடாரம் மற்றும் வணிக

உபகரணங்களுக்கு மட்டும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாரம் உடனடி உதவி

வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக,” அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.