SELANGOR

டிங்கி சம்பவங்கள் 3,470ஆகக் குறைந்துள்ளது - பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி 

29 ஆகஸ்ட் 2023, 9:30 AM
டிங்கி சம்பவங்கள் 3,470ஆகக் குறைந்துள்ளது - பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி 

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 29: பெட்டாலிங் ஜெயா மாநகராட்சியில் (எம்பிபிஜே) 33 வது வாரத்தில் டிங்கி சம்பவங்கள் 3,470 ஆகக் குறைந்துள்ளது. முந்தைய வாரத்தில் டிங்கி சம்பவங்கள் 3,581 ஆகப் பாதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இரண்டு சதவீதம் அல்லது 111 வழக்குகள் குறைந்திருப்பது, சிக்கலைச் சமாளிப்பதில் எம்பிபிஜேயின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது என்று அதன் மேயர் முகமட் அஸான் முகமட் அமீர் கூறினார்.

"தொற்றுநோய் பரவும் பகுதிகளின் மொத்த எண்ணிக்கை 62 ஆகும், அவற்றில் 46 கட்டுப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் எட்டு 'ஹாட்ஸ்பாட்கள்' ஆகும்.

டிங்கி நோயின் தாக்கம் தொடர்ந்து குறைவதற்குக் துப்புரவு பணி திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் குடியிருப்பாளர்களுக்கு நினைவூட்டினார்.

"புதிய இறப்பு வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை, மேலும் இந்த பிரச்சனையை கையாள்வதில் தொடர்ந்து கைகோர்த்து செயல்படுமாறு அனைவரையும் நான் அழைக்கிறேன்

" டிங்கி பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் சுற்றுப்புற பகுதிகளைச் சுத்தம் செய்யும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த வேண்டும்," என்று அவர் சமூகத் தலைவர்களைக் கேட்டு கொண்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.