ஷா ஆலம், ஆகஸ்ட் 28: கடந்த வாரம் கோத்தா அங்கெரிக் தொகுதியில் 66வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு 1,000க்கும் மேற்பட்ட ஜாலூர் கெமிலாங் விநியோகிக்கப்பட்டது.
நவீன சந்தைப் பிரிவு 6, மேடன் செலேரா பிரிவு 2, பெட்ரோனாஸ் புக்கிட் ஜெலுத்தோங் மற்றும் தாமான் ஆலம் புடிமான் வணிகத் தளம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஜாலூர் கெமிலாங் விநியோகம் செய்யப்பட்டது என மக்கள் பிரதிநிதி நஜ்வான் ஹலிமி தெரிவித்தார்.
“அவை கடந்த வாரம் கட்டம் கட்டமாக விநியோகம் செய்யப்பட்டது. பெருமையின் கொடியாக விளங்கும் ஜாலூர் கெமிலாங்கை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினோம்.
"இந்த திட்டம் தேசிய தினத்தை முன்னிட்டு தேசப்பற்று உணர்வைத் தூண்டும். ஜாலூர் கெமிலாங்கின் அசைவு மலேசியாவை நேசிக்கும் பல இன மக்களின் ஒற்றுமைக்கு சான்றாக இருக்கும்" என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.
ஆகஸ்ட் 30 அன்று, மாநில அளவிலான சுதந்திர தின விழா ஷா ஆலம் சுதந்திர அரங்கத்தில் மாலை 4.45 முதல் நள்ளிரவு 12 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஹபீப் அலி ஜேனால் ஆபிடின் தலைமையில் வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகள், கலாச்சார நிகழ்ச்சிகள், அனாக் ஹராப்பான் சிலாங்கூர் அணிவகுப்பு மற்றும் வானவேடிக்கை உட்பட பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடைபெறும்.








